அந்த அமைதியான செம்மண் ரோட்டில் ஜீப் சென்று கொண்டிருந்தது. நான் ஜீப்பின் பின் சீட்டிலும் திலகா முன்சீட்டிலும் அமர்ந்திருந்தோம். பொங்கல் மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு புளியம்பட்டி வரை பஸ்ஸில் வந்த எங்களை கூட்டிப்போக குணா மாமா வந்திருந்தார். குணா மாமா வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க திலகா அவருடன் பரஸ்பர விசாரிப்பில் இருந்தாள். 20 நிமிட நேர பயணத்தில் எங்கள் தோப்பு வீட்டை அடைந்தோம்.
“நித்யா மா எளநி சொல்லுச்சு, பறிக்க சொல்லிருந்தேன்…!! இருங்க கையோட எடுத்துட்டு போலாம்” சொல்லியபடி மாமா வண்டியை நிறுத்தி விட்டு தோப்பில் இறங்கினார்.
எனக்கும் பயணக்களைப்பில் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது.
“திலா, ரெஸ்ட் ரூம்??” திலகாவிடம் கேட்க அவளும் சரியென வந்தாள். அந்த தோப்பு வீட்டில் குணா மாமாதான் பெரும்பாலும் தங்குவார். அதனால் ஜீப் சாவியுடன் வீட்டின் சாவியை மாமா கோர்த்து வைத்திருப்பது வழக்கம். சாவியை எடுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே நுழைந்து பாத்ரூம் நோக்கி நடந்தேன். கிட்டதட்ட ஒரு குடும்பம் குடித்தனம் நடத்துமளவுக்கு சாமான்களால் நிரம்பி இருந்தது அந்த வீடு. “ஆறு மாதங்களுக்கு எவ்வளவு மாற்றம்??” எண்ணியபடி பாத்ரூமை அடைந்தேன். உடலின் உஷ்ணத்தை சிறுநீர் கழித்து வெளியேற்றி விட்டு, வெளியே வர கதவை திறக்கும்முன் அதை கண்டேன். ‘என்ன அது?? கதவின் மேல் மர இடுக்கில் கருப்பாக…’ அங்கிருந்த பல்துலக்கும் ப்ரஷ் ன் அடிப்பாகத்தால் தள்ளினேன். ‘பொத்’ தென விழுந்தது. இரண்டு அல்லது மூன்றாக மடிக்கப்பட ஆணுறைகள். ‘யாருக்கு யாருடன் தொடர்பு?’ இந்த வீட்டை மாமா மட்டும்தான் பயன்படுத்துகிறாரா? அல்லது அவருடன் இணைந்து நண்பர்கள் வேறு யாருமா?’ யோசித்தேன்.
“ஆயிடுச்சா பேப்ஸ்” திலகா வெளியிலிருந்து கத்தினாள்.
“வந்துட்டேன்” சொல்லிக்கொண்டே இருந்ததை இருந்தபடியே வைத்து வெளியே வந்தேன்.
“என்னாச்சு பேப்ஸ்…!! பெய்னிங்கா?” கேட்டபடி பதில் எதிர்பாராமல் உள்ளே நுழைந்து கதவடைத்தாள் திலகா.
“நோ திலா…!!!” சொல்லிக்கொண்டே வீட்டை நோட்டமிட்டேன்.
“சின்ன பாப்பா… ” சத்தம் வாசலில் இருந்து வந்தது.
வெளியே எட்டிப் பார்த்ததேன். தோப்பின் காவல்காரர் மாடசாமி அண்ணா இரண்டு கையிலும் இளநீருடன் நின்றிருந்தார்.
“சின்னையா எளநி குடுக்க சொன்னார்” மாடசாமி கொடுத்தார்.
“நல்லாருக்கீங்களா அண்ணா?” மாடசாமியை நலம் விசாரித்தபடி இளநீரை வாங்கினேன்.
“நல்லாருக்கேன் சின்ன பாப்பா…!!! நீங்க எப்படி இருக்கீங்க??”
“நல்லாருக்கோம்ணா…!!!” சொல்லிக்கொண்டே ‘இவரிடம் விசாரிக்கலாமா?? என யோசித்தேன். அதற்குள் திலகாவும் வெளியே வந்து மாடசாமியுடன் பேசினாள்.
“வீட்டையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கீங்க, நீங்க தான் ‘க்ளீன்’ பண்ணீங்களா??” மாடசாமியை கேட்டேன்.
“இல்லம்மா..!!! இப்பல்லாம் தோப்பை மட்டுந்தான் நா பாத்துக்கறேன்..!!”
“அப்படினா வீட்டை ..??”
“அ… அது…” இழுத்தார்.
“யோவ்… மாடா ….!!!!” ஜீப்பில் இருந்து மாமா குரல் கொடுத்தார்.
“வரேன்மா… வந்துட்டேன் சின்னையா” சொல்லியபடி ஓடினார்.
இளநீரை கபகபவென்று இருந்த வயிற்றுக்கு கொடுத்ததும் குடல் ‘ஜில்’லென மாறியது.
“நம்ம தோப்பு இளநீர் தனி டேஸ்ட் தான் பேப்ஸ்” கடவாயோரம் இளநீர் வழிய திலகா சொன்னாள்.
“ம்.. ” மீதமிருந்த இளநீரை உறிஞ்சியபடி சொன்னேன்.
“நித்திக்குதான் அதிர்ஷ்டம்”திலகா.
புரியாமல் திலகாவை பார்த்தேன்.
“ஆமாடி…!!! எங்கண்ணன் இளநீர் கொடுத்தே….. ம்.. ம்.. லாம் பண்ணிட்டான் போல” சொன்னாள்.
புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தேன். அதில் நம்மாள் முடியவில்லை என்கிற இயலாமையும், நம் வயதுடைய அவளுக்கு கிடைத்து விட்டதே எனும் பொறாமையும் கலந்திருந்தது. ஆம்..!!! நான்கு நாளில் என்னை திலகா மாற்றியிருந்தாள்.
“பான்ட்டி, ப்ரா கூட எடுக்காம போயிருக்கா பேப்ஸ்” திலகா சொல்லவும் அதிர்ந்து திலகாவை பார்த்தேன்.
“என்ன சொல்லுற திலா”
“யெஸ் பேப்ஸ், கட்டிலுக்கு கீழ யூஸ் பண்ணின காண்டமோட கவரும், ஒரு செட் அழுக்கு இன்னரும் கிடந்துச்சு, சரி நித்யா தேறிட்டா னு விட்டுட்டேன்” திலகா சொல்லவும் திடுக்கிட்டேன்.
இதே பழைய ஹேமலதாவாக இருந்திருந்தால் இந்நேரம் கோவம் தலைக்கேறியிருக்கும். ஆனால் நான் கொஞ்சம் பக்குவமடைந்திருந்தேன்.
“திலகா…!!! நேரமாகுது” குணா மாமா கூப்பிட்டார்.
“சரி…!!! கிளம்பலாம் பேப்ஸ்” திலகா.
ஐந்து நிமிட குலுங்கிய பயணத்திற்கு பிறகு வீட்டை அடைந்தோம். நான் மட்டும் ஜீப்பை விட்டு கீழே இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன். திலகாவும், மாமாவும் அவங்க வீட்டிற்கு கிளம்பினார்கள். வாசலில் எங்களுக்காக நித்யா காத்திருந்தாள்.
“அம்மா.. ஹேமா வந்துட்டாமா” சொல்லிக்கொண்டே, “ஹேமா…!!!” என நித்யா என்னிடம் ஓடி வந்தாள்.
“நித்தி…!!!” கையிலிருந்த பெட்டி, பைகளை வேலைக்காரி கங்காவிடம் கொடுத்துவிட்டு அவளை நோக்கி ஓடினேன். கடைசியாக தீபாவளிக்கு வந்தபோது பார்த்தது. மூன்று மாதம் பிரிந்த ஏக்கம் அவளை பார்த்ததும் மறைந்தது.
நித்யாவை கட்டித்தழுவி பிரிவின் வலியை கண்ணீராக வெளிப்படுத்தினேன். அவளும் அழுதாள்.
“என்னடி ரொம்ப இளைச்சிட்ட??” கண்களை துடைத்துக் கொண்டே கேட்டாள்.
“அதெல்லாம் இல்ல… நீதான் பிரியாணியா சாப்பிட்டு குண்டாகிருக்க” கண்களை துடைத்து சிரித்த முகத்துடன் சொன்னேன்.
“கிண்டல் பண்ணாத டி” வெட்கத்தில் நெளிந்தாள்.
“ஏய்..!! தெருவுல நின்னு ஏலம்போடாம உள்ள வாங்கடி” அம்மா வீட்டிலிருந்து கத்தினாள்.
இருவரும் எங்களது அறைக்கு சென்றோம். கங்கா எனது பெட்டியை உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்தாள். நித்யா அறையை மிகவும் சுத்தமாக வைத்திருந்தாள்.
கருத்து எழுதுங்கள்