mulai kamakadai அண்ணாச்சியம்மா ஏற்படுத்திய தாக்கம்.. சசியை மிக மோசமாக பாதித்தது.!
அவனது ஆழ் மனதில் அமிழ்ந்து கிடந்த.. காலத்தால் அழிக்க முடியாத.. அவனது நினைவடுக்கு.. கிளறப்பட்டது.!
Story : Mukilan
அதன் விளைவு..
அன்றைய இரவு.. சசிக்கு உறக்கமற்ற இரவாக முடிந்தது.!
உறக்கமற்ற இரவைக்கூட அவன் சுலபமாகக் கழித்து விடுவான்.. ஆனால் இரக்கமற்று.. மீண்டும்.. மீண்டும் வந்து உயிரை வதைக்கும்.. உள்ளத்து உணர்வுகளின் அவஸ்தை..
ஒரு இரவு முழுவதும் அவன் இதயத்தில் ரத்தம் கசிய வைத்தது..!!
அதனால்….
அடுத்த நாள் காலையில் குமுதா எழுப்பிய போதும் எழாமல்.. அல்லது எழ முடியாமல்.. தூங்கினான். !!
அவன் சுய உணர்வு பெற்று.. உறக்கம் கலைந்தபோது காலை பத்து மணி. !
அப்போதுகூட அவனாக எழவில்லை.
அவன் கண்விழித்தபோது.. குமுதாவின் பெண்.. மது.. அவன் வயிற்றின் மேல்.. இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்து.. அசைந்தாடிக்கொண்டிருந்தாள்.!
அவளது முத்துச்சிப்பி வாய்.. உணவை அசை போட்டுக்கொண்டிருந்தது.
அவள் பக்கத்தில் குமுதா உணவுத் தட்டைக் கையில் பிடித்தவாறு நின்றிருந்தாள்.!
அவன் வயிற்றின்மேல் உட்கார்ந்திருந்த மதுவைக் கையில் பிடித்தவாறு..
”என்னடா செல்லம்.. பண்ற..?” எனக் கேட்டான் சசி.
” ச்சாப்பிடர..” என வாயசைவுடன் அவன் வயிற்றின்மீதே படுத்தாள்.
குமுதாவைப் பார்த்தான்.
”நீதான் மேல ஏத்தி விட்டியா..?”
சிரித்தாள் குமுதா.
”மாமாவ எழுப்புனு சொன்னேன்.. நேரா வந்து உன் வயித்து மேல ஏறி உக்காந்துட்டா..! அவ உக்காந்து எத்தனை நேரம் ஆச்சு தெரியுமா..? நீ இப்பதான் முழிச்சிருக்க..? நானும் ரெண்டு மூணு தடவை எழுப்பி பாத்து.. முடியாம.. விட்டுட்டேன்.. அப்படி என்னடா தூக்கம்.. உனக்கு..? நைட்டெல்லாம் தூங்கலையா..?”
மதுவை கீழே நகர்த்தி உட்கார வைத்துவிட்டு.. எரிச்சல் எடுத்த.. கண்களைக் கசக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான்.
”ம்..ம்ம்..”
”ஏன்டா… என்னாச்சு.. திடீர்னு..?”
”ப்ச்… ஒன்னுல்ல..” என பாத்ரூம் போனான்.
முகத்தில் தண்ணீரை அடித்து அடித்து கழுவினான்.! குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதில்.. கண் எரிச்சல் சற்று குறைவானது.!
வெளியே போனான்.!
”காபி குடிக்கறியா.?” அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டாள் குமுதா.
”ம்..ம்ம்..! குடு..!” சோபாவில் உட்கார்ந்தான்.
மது ஓடிவந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்.
கையில் இருந்த உணவுத் தட்டைக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் குமுதா.
”சரியா சாப்பிடவே மாட்டேங்கறா.. இனி இவளுக்கு என்னாச்சுனு தெரியல.. இந்தா.. ஒரு ரெண்டு வாய் ஊட்டிவிடு.. உன்கிட்டன்னா சாப்பிட்டுக்குவா..!”
சசிக்கு கடுப்பாகிவிட்டது.
”ஏய்.. லூசு.. போடி எடுத்துட்டு..! ஆளையும்.. அவளையும் பாரு..!!” என்று திட்டினான்.
”ஏன்டா..?” லேசான திகைப்புடன் அவனைப் பார்த்தாள் குமுதா.
”அவ சாப்பிடலேன்னா பேசாம விடு.. என்னாலல்லாம் இப்ப ஊட்ட முடியாது. .” என எரிச்சலோடு சொன்னான்.
”முடியாதுனா.. முடியாதுனு சொல்றதுதான..? அதுக்கு ஏன் இப்படி எரிஞ்சு விழற..?” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தான்.
”முதல்ல காபி வெய்.. போ..!!”
”தரேன்.. அதுக்கும் எரிஞ்சு விழாத.. இவளையாவது மடில வெச்சிருக்கியா இல்ல… எறக்கிரட்டுமா..?” என அவள் சீரியஸாகக் கேடக…
சிரித்துவிட்டான் சசி.
”இருக்கட்டும் போ..!”
”ம்ம்.. நைட்டெல்லாம் தூஙகாம.. முழிச்சிட்டு கெடக்கறது.. அப்பறம் காலைல அரையும் கொறையுமா தூங்கி எந்திரிச்சு… இப்படி வள்.. வள்ளுனு நம்மகிட்ட விழவேண்டியது.! ஒரு கல்யாணத்தை பண்ணி தொலைனா.. கேக்கறதில்ல…” என அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே.. கிச்சனுக்குப் போனாள் குமுதா. !
மதுவும் அவன் மடியில் உட்காரவில்லை. அவனிடமிருந்து இறங்கி.. அவள் அம்மா பின்னால் ஓடினாள்.
சசி ரிமோட்டை எடுத்து டிவி சேனல்களை மாற்றினான்.
அம்மா பின்னால் ஓடிய மது.. ஒரு நீலக்கலர் பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் குடித்தவாறு வந்தாள்.
தண்ணீர் குடித்த பின்.. டம்ளரைக் கீழே வைத்து விட்டு.. மறுபடியும் அவன் மடிமீது இடம் பிடித்தாள்.!
குமுதா காபியுடன் வந்தாள். காபியை அவன் கையில் கொடுத்து விட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
”ஏன்டா… என்னாச்சு..?”
”என்ன..?”
” ஒடம்புக்கு ஏதாவது பிரச்சினையா.?”
”அதெல்லாம் ஒன்னும் இல்ல..” காபியை உறிஞ்சினான்.
”கடைக்கு போவியா..?”
”தெரியல..! நீ சாப்பிட்டியா..?”
”ம்..ம்ம்..! உன்ன எழுப்பி எழுப்பி பாத்தேன். நீ எந்திரிக்கவே இல்ல..! உங்க மச்சான்தான் தூங்கினா தூங்கிட்டு போறான் விடுனு சொன்னாரு..! அப்பறம் விட்டுட்டேன்.!”
”ஏதாவது சொல்லிட்டு போனாரா..?”
” இல்ல… போறயா..?”
”என்னன்னே தெரியல.. ஒடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி.. ரொம்ப டயர்டா இருக்கு..”
”நைட்ல ஒழுக்கமா தூஙகலேன்னா அப்படித்தான்.. ஆகும்..!! மனசுல ஏதாவது இருந்தா சொல்லு..!!” என்றாள்.
”ம்..ம்ம்.. ஆரம்பிச்சுட்டியா…?” என சலித்துக் கொண்டு சொன்னான் சசி..!!
அப்பறம்…. அவன் சாவகாசமாகப் போய் குளித்துவிட்டு வந்து.. குமுதா சுட்டுக்கொடுத்த தோசையை சாப்பிட்டான்.
அவன் சாப்பிடும்போது.. மதுவுக்கும் ஊட்டி விட.. அவள் மறுக்காமல் சாப்பிட்டாள்..!!
பதினொரு மணிக்கு மேல்.. சசியின் போன் பாடியது.
எடுத்துப் பார்த்தான்.
‘அழைப்பில்.. காத்து. !’ என்றது.
பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தான்.
”ஹலோ..?”
”நண்பா.. நாந்தான்டா..” என்றான் காத்து.
” ஆ.. சொல்லுடா..”
”எஙகருக்க.. இப்ப..?”
”வீட்லடா..! ஏன்டா..?”
”என்ன பண்ணிட்டு இருக்க..?”
”சும்மாதான்..! நீ.. எங்கருக்க..?”
”உங்க கடைல.. இருக்கேன்..” என்றான்.
” பழக்கடைலயா.?”
”ம்..ம்ம்..!”
”அஙக என்ன பண்ற.?”
” உன்ன பாக்கலாம்னுதான் வந்தேன்.! நீ இன்னிக்கு லீவ் போட்டுட்டேனு மச்சி சொன்னாரு..? ஏன்டா ஒடம்பு சரியில்லையா..?”
”அதெல்லாம் ஒன்னுமில்லடா.. கொஞ்சம்.. டயர்டா இருந்துச்சு..! சரி என்னை பாக்க.. எதுக்கு நீ வந்த..?”
கருத்து எழுதுங்கள்