வணக்கம் நண்பர்களே. நான் யார் என்று முதலில் உங்களிடம் அறிமுகம் செய்துகொள்கிறேன். எனதுபெயர் அஜெய் , வயது -26 இஞ்சினியரீங் முடித்து விட்டு சென்னையில் ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறையில் பனியற்றிக்கொண்டிருக்கிறேன்.
இதுநாள் வரை இந்த தளத்தில் நானும் ஒரு வாசகனாக இருந்து நிறைய கதைகளை படித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். முதல் முறையாக எனது அனுபவம் மற்றும் சில ஆசை கணவுகளையும் இனைத்து ஓரு தொடர் கதையாக எழுத உள்ளேன். கதையை மட்டும் படித்து மகிழ்ச்சி அடையுங்கள், இதை முயற்ச்சி செய்து பார்காதீர்கள்.
காலை வேலை.
டேய் அஜெய். அஜெய்ய்ய்ய். எழுந்திரிடா.
அறையில் நன்றாக துங்கிகொண்டிருந்த என் முகத்தில் தீடிரென்று சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்விச்சி விச. கண்களை மெல்ல திறந்து பார்த்தேன்.
அம்மா : காலைல இரயில்வே ஸ்டேஷன் போகனும் சீக்கிரம் எழுப்பி விடுனு சொல்லிட்டு. இப்போ எப்படி துங்கிட்டு இருக்கான் பாரு. டேய் அஜெய். எழுந்துருடா.
நான் : அம்மா. அதுக்குள்ள எதுக்குமா எழுப்புன! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தான. இன்னும் கொஞ்ச நேரம் துங்கவிடுமா என்று மீண்டும் எனது போர்வை போர்த்தி படுக்கபோக.
அம்மா : சரியா போச்சு போ. இன்னைக்கு காலைல சுரேஷ் ஃபேமிளியாட வரான். அவன போய் இரயில்வே ஸ்டேஷன்ல பிக்கப் பண்ண போகனும். எழுப்பி விடுனு சொன்னல.
இப்போ இன்னும் கொஞ்ச நேரம் துங்கனும்னு சொல்ற.
அப்பொழுது தான் என் நினைவுக்கு வந்தது. ஆம் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் காலையில் என்னை எழுப்பிவிடு என்று.
நான் எழுந்து கடிகாரத்தை பார்க்க மணி 9 ஆகி இருந்தது.
நான் : என்ன மா நீ. இவ்வளோ பொருமையா வந்து எழுப்புர ! உன்ன எப்போ எழுப்பிவிட சொன்னே.
அம்மா : நல்லா இருக்குடா நீ சொல்றது. காலைல இருந்து எவ்வளோ நேரமா உன்னை எழுப்ப முயற்ச்சி பன்னிட்டு இருக்கன் தெரியுமா. ஆனா நீ என்னடானா கத்துரத காதுல கூட வாங்காம நல்லா துங்கிட்டு இப்போ என் மேல பழிய போடுறியா.
நான் : உன்ன அப்புறம் வந்து பாத்துக்குறேன்.
என்று கூறிவிட்டு அவசர அவசரமாக குளித்துவிட்டு அப்பா ஓட காரை எடுத்துக்கொண்டு இரயில் நிலைத்திற்க்கு செல்ல புறப்பட்டேன்.
காரில் சென்று கொண்டிருந்த போது எனது செல்போன் மணி ஒளிக்க அதை எடுத்து பார்த்தேன். எனது நண்பன் தான்.
நான் : சொல்லுடா.
இன்னும் 5நிமிஷத்துல இரயில்வே ஸ்டேஷன்ல இருப்பேன்டா. நீங்க வந்துட்டிங்களா?
நான் : சரிடா. இரயில் வரதுகுள்ள நா வந்துருவன். நீங்க அங்கையே வெயிட் பன்னுங்க.
போனை துண்டித்தேன். எனக்குள் ஓரு மகிழ்ச்சி, உற்ச்சாகம் பொங்கியது. ஏனெனில் 15 வருடத்திற்க்கு பிறகு எனது குழந்தை பருவ நண்பனை மீண்டும் சந்திக்க போகிறேன். ஆம் அவன் பெயர் சுரேஷ். என்னோட முதல் நண்பன் நானும் அவனும் 3 வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம்.
அவனுடைய பத்தாவது வயதில் அவன் அப்பா ஓரு விபத்தில் இறந்துவிட்டார். அதன் பின்பு அவன் குடும்பம் அவர்களை அவர்கள் சொந்த ஊருக்கே கேரளா மாநிலத்திற்க்கு கூட்டிச்சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு நாங்கள் இன்று வரை சந்திக்க வில்லை. இப்பொழுது தான் மீண்டும் சந்திக்க போகிறோம்.
ஓரு வழியாக இரயில் நிலையத்திற்க்கு வந்து சேர்ந்தேன். காரை பார்க் செய்துவிட்டு, நடைபாதை டிக்கட்டை வாங்கி கொண்டு பொருமையாக இரயில் நிலைத்திற்க்குள் நுழைந்தேன். ஓரு வேர்கடலை பாக்கெட்டை வாங்கி கொண்டு அவர்கள் வரும் இரயில் நிலைய நடைமேடைக்கு சென்று இரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.
5 நிமிடத்திற்க்கு பிறகு எதிர்பார்த்த இரயில் வந்து சேர்ந்தது. அவன் கூறிய கம்பார்ட்மென்ட்டை தேடிக்கொண்டே செல்போனை எடுத்து அவனுக்கு கால் செய்தேன்.
நான் : டேய் எந்த கம்பார்ட்மென்ட் டா?
சுரேஷ் : S4 கம்பார்ட்மென்ட் டா.
நான் : நானும் அந்த கம்பார்ட்மென்டுக்கு முன்னாடி தான்டா நிக்குறேன்.
சுரேஷ் : நா உன்ன பார்த்துட்டேன். ரைட் சைட் பக்கம் திரும்பி பாரு.
அவன் கூறிய திசையை திரும்பி பார்க்க. இரயில் பெட்டியின் வாசலில் நின்றுக்கொண்டு என்னை நேக்கி கை அசைத்தான்.
நான் : மச்சா.
இரயிலில் இருந்து இறங்கி சுரேஷ் வேகமாக ஒடி வந்து என்னை கட்டிபிடித்துக்கொண்டான். நானும் அவனை கட்டிபிடித்துக்கொண்டேன்.
23வருட நட்பு அல்லவா.
சுரேஷ் : எப்படி மச்சான் இருக்க?
நான் : நா நல்லா இருக்க மச்சி. நீ எப்படி இருக்க. ??
சுரேஷ் : உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் மச்சா எனக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு.
அஜெய்.
நான் திரும்பி பார்க்க அங்கே சுரேஷின் அம்மா (சங்கீதா) நின்றுகொண்டிருந்தார்கள்.
நான் அங்கே சென்று அவர்கள் காலில் விழுந்து அசிர்வாதம் வாங்கி அவர்களை கட்டிபிடித்தேன்.
நான் : எப்படிமா இருக்கிங்க? நல்லா இருக்கிங்களா?
சு. அம்மா : நா நல்லா இருக்கேன்பா. நீ எப்படி இருக்க ? வீட்டில அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க?
நான் : எல்லாரும் நல்லா இருக்காங்க மா.
பைய என்கிட்ட குடுங்கமா நா எடுத்துட்டு வரேன்.
சுரேஷ் : எங்கமா உன் பொன்னு? ஆள கானும் ?
சு. அம்மா : முஞ்சு கழுவிட்டு பைய எடுத்துட்டு வரன் நீ முன்னாடி போனு சொன்னாடா.
சுரேஷ் : அவளுக்கு எப்ப பாரு இதே வேளையா போச்சு. எங்க போனாலும் லேட் பன்றா.
சு. அம்மா : கொஞ்ச நேரம் இரு வந்துருவாடா.
சுரேஷ் : ஆமா. இப்படியே நீ அவளுக்கு செல்லம் கூடுத்துட்டு இரு. அதனால தான் அண்ணணு இருக்க என்ன மதிக்க மாட்டிக்குறா.
நான் : டேய். கொஞ்ச நேரம் இருடா. வந்துருவா.
சுரேஷ் : நீ சும்மா இருடா. அவள பத்தி உனக்கு தெரியாது.
சு. அம்மா : அதோ. அவளே வந்துட்டா!.
சு. அம்மா கூறிய திசையில் பார்த்த நான் ஓரு நிமிடம் உறைந்துவிட்டேன். காரணம் நடந்து வருவது நான் சிறு வயதில் பார்த்த அவள் தானா இல்லை தேவதையா என்று தெரியவில்லை.
வெள்ளை நிர சூடிதாரில் இறக்கைகள் இல்லாத தேவதையாக ஓரு பெண் நடந்து வந்துகொண்டிருந்தாள்.
அவள் அனிந்திருந்த வெள்ளை நிற சூடிதாரை விட அவள் தேகம் பால் போல ஜெலித்தது.
சு. அம்மா : என்னடி அப்படி பாக்குற. நம்ம அஜெய் டி.
சுரேஷ் : மச்சா இது யாருனு தெரியுதுல ? சின்ன வயசுல நம்மல வீட்டுல போட்டு குடுத்து அடிவாங்க வைக்குமே அதே ராட்சசி தான் டா இவ.
நான் தலையை மட்டும் ஆட்டினேன்.
சுரேஷின் காலில் ஓங்கி ஓரு மிதி விழுந்தது.
சுரேஷ் : ஆஆஆஆ அம்மாமாமா. என்று கத்த ஆரம்பித்தான் அதன் பிறகு தான் நான் சுய நினைவு அடைந்தேன்.
ச. அம்மா : பவி. வந்ததும் உங்க வேலைய ஆரம்பிச்சுடிங்களா.
ஆம் அந்த தேவதையின் பெயர் பவித்ரா. செல்லமாக பவி என்று அழைப்பார்கள். நான் மட்டும் வாயாடி என்று ஆழைப்பேன். காரணத்தை போக போக கதையில் நீங்களே பார்பிர்கள்.
சுரேஷ் : இந்த ராட்ச்சசிய அங்கையே விட்டு வந்துருக்கனும் மா. அப்ப தான் இவ கொழுப்பு கொஞ்சம் அடங்கிருக்கும்.
அவன் கூறியதை கேட்டவுடன் என்னை மீறி சிரித்துவிட்டேன்
பவி : நா இல்லமா. இவன் தான். என்று அவன் அண்ணனை முறைத்துக்கொண்டே என்னை பார்த்தாள். அவள் பார்ததும் நான் சு. அம்மா விடம் போலாமா என்று கேட்டேன்.
சு. அம்மா : நீ வாப்பா. அவங்க எப்பவும் இப்படி தான்.
நாங்கள் முன்னே நடக்க, பின்னே அவர்கள் இருவரும் சண்டை போட்டுகொண்டே வெளியே வந்தனர்.
ஓரு வழியாக காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு அழைத்து வந்துக்கொண்டிருந்தேன்.
சுரேஷ் : அம்மா. சென்னை ரெம்ப மாறிடுச்சுல!.
சு. அம்மா : இருக்காதா பின்ன!. 15 வருஷத்துக்கு பிறகு பாக்குறோம்ல, அப்படிதான் தெரியும்.
நான் : அப்போ அப்போ , சென்னை வந்து போய்ருந்தா இந்த மாற்றம் தெரிஞ்சிருக்காது ல.
சுரேஷ் : எங்களுக்கும் அந்த ஆசை இருந்துச்சுடா. . ,ஆனா என்ன பன்றது எங்களோட நேரம் அந்த மாதிரி போய்டுச்சு. இப்பகூட நாங்க வந்ததே, இந்த ராட்ச்சசி ஆள தான்.
பவித்ரா : அம்மா பாரு மா.
சு. அம்மா : சரி விடுடா. அதான் வந்தாச்சுல.
சுரேஷ் : இவ ஆசைபட்டானு இங்க இருக்க மெடிக்கல் கல்லுரில இவல சேத்தாச்சு, ஆனா இதுக்கு அப்புறம் நம்ப என்ன பன்னபோறோம்னு தெரியலையே.
அஜெய் : டேய் நீ கவலைபடாதடா. நா எனக்கு தெரிஞ்ச நண்பர்கிட்ட உன்னோட வேலை விஷயமா பேசிட்டே. இன்னும் 2வாரத்துல உனக்கு வேலை கிடைச்சிடும்.
சு. அம்மா : உன்ன நம்பி தான் அஜெய் நாங்க திரும்ப வந்தோம். நீ மட்டும் இந்த உதவிய.
நான் : என்னமா. உதவினு லாம் பேசிகிட்டு இருக்கிங்க. நானும் உங்க பையன்தான் மா.
சுரேஷ் : இன்னும் எவளோதுறம்டா? ? ?
நான் : 5நிமிஷம் தான்டா.
சு. அம்மா : அஜெய். முதல்ல உங்க வீட்டுக்கு போ பா. உங்க அம்மாவையும், அப்பாவையும் பாத்துட்டு அப்புறம் அங்க போலாம்.
நான் : வேண்டாம் மா.
சுரேஷ் : ஏன்டா? ??? ரெம்ப நாள் ஆச்சுல.
நான் : அது இல்லைடா. அம்மாவும், அப்பாவும், நமக்கு மதியம் சாப்பாடு செஞ்சி கொண்டுவரன் சொல்லிட்டாங்க. சோ. நம்ம இப்போ வீட்டுக்கு போகலாம் , மத்தியம் அப்பாவும் அம்மாவும் வருவாங்க.
சு. அம்மா : எதுக்கு பா, அவங்களுக்கு சீரமம். கடைல வாங்கிகலாம்ல.
நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லமா.
அதற்குள்ளே நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்தது.
சுரேஷ் : இந்த வீடா மச்சி.
நான் : ஆமாடா.
சுரேஷ் : டேய் பெரிய வீடு மாதிரி இருக்கு பாக்க.
நான் : வாங்க உள்ள போகலாம்.
வீட்டை திறந்து அவர்கள் மூவரையும் உள்ளே அழைத்துச்சென்றேன். உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி.
சுரேஷ் : அஜெய். இந்த வீடு ரெம்ப பெருசா இருக்கேப்பா. வாடைகை அதிகமா கேப்பாங்க போலையே.
நான் சிரிக்க. மூவரும் என்னை பார்க்க.
நான் : அம்மா. இது எங்களோட வீடு தான் மா.
சுரேஷ் : என்னடா சொல்ற. ?
நான் : ஆமா டா. நானும் அப்பாவும் சேர்ந்து தான் இந்த வீட்டை வாங்கினோம். நீங்க இங்க வர போரதை அப்பா கிட்ட சொன்னபோது !. அப்பா தான் உங்களை இங்க தங்க சொன்னார்.
எனக்கும் அது சரினு பட்டுச்சு.
சுரேஷ் : மச்சா உனக்கு எப்படி.
நான் : இப்போ மட்டும் நீ நன்றி சொன்ன. அப்புறம் எதுல அடிப்பேன் எனக்கே தெரியாது.
சுரேஷ் கட்டி பிடித்துக்கொண்டான். அப்பொழுது எதர்ச்சியாக நான் பவித்ராவை பார்க்க அவள் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் : அம்மா. நீங்க அனுஃப்ச எல்லா தீங்ஸும் அரேஞ் பன்னிடேன். வேற எதாச்சும் வேணும்னா என்கிட்ட சொல்லுங்க. நா வாங்கி தரன்.
சு. அம்மா : சரிபா.
அதன் பிறகு அவர்களுக்கு வீட்டை சுற்றிக்காட்டினேன். அந்த தெருவில் எங்க வீடு தான் கடைசி வீடு, இரண்டு மாடி கொண்ட பங்களா வீடு ,அது மட்டுமில்லாமல் எங்கள் வீட்டில் பின் பகுதியில் தோட்டம் போண்று சிறிய இடம் உள்ளது. அதில் இருந்த மரங்கள் மற்றும் செடிகளை பார்த்த பவித்ராவின் முகத்தில் மகிழ்ச்சி.
அவள் முகத்தில் அந்த சிரிப்பை பார்த்த எனக்கு
அப்பா. என்ன பொண்ணுடா இவ. பால் ல உரவைச்ச ரசகுல்லா மாதிரி இவ்வளோ அழகா இருக்கா. அவ சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்காளே. ,அவளோட முடி அவ இடுப்பு பகுதியை கடந்து கிழே வரை சென்றுகொண்டிருந்தது. 15 வருஷத்துல ஆளே மாறிட்டா.
அனைவரும் பேசிக் கொண்டிருக்க, மதியம் ஆனது, எனது பெற்றோர்கள் அவர்களுக்காக சாப்பாடு கொண்டு வந்தனர்.
ஹலோ.
நாங்க உள்ள வரலாமா?
சு. அம்மா : வாங்க. வாங்க.
சுரேஷ் : ஆண்டி.
சு. அம்மா : வாங்க அண்ணா.
அம்மா : எல்லாரும் எப்படி இருக்கிங்க?. பார்த்து ரெம்ப வருஷம் ஆகுது?
சு. அம்மா : நாங்க நல்ல இருக்கோம் அண்ணி. நீங்க எப்படி இருக்கிங்க.
அம்மா : இம்ம்ம்ம்ம்ம் நல்ல இருக்கோம்.
சு. அம்மா : உட்காருங்க அண்ணா.
அப்பா : வீடு புடிச்சிருக்கா மா!. எல்லாம் ஓக்கே தானமா !.
சுரேஷ் : ரெம்ப புடிச்சிருக்கு பா. இவ்வளோ பெரிய உதவி பன்னுவிங்கனு எதிர்பாக்கல பா.
அப்பா : என்ன சுரேஷ் இதுக்கு போய்ட்டு.
அம்மா : ஆமா. பவித்ரா எங்க? ஆள கானும்.
சு. அம்மா : அவளோட தீங்க்ஸ் எல்லாத்தையும் அடுக்கி வெச்சிட்டு இருக்கா. ஒரு நிமிஷம் இருங்க கூபிடுறேன்.
பவி. பவி இங்க பாரு யாரு வந்துருக்காங்கனு ? கீழ இறங்கி வா.
இதோ வந்துடன் மா. படியில் இறங்கி வரும்போது பவித்ரா என்னுடைய அப்பா அம்மாவை பார்த்தாள்.
பவி : அத்தை. மாமா.
ஓடி வந்தாள்.
அம்மா : பவிகுட்டி.
ஓடி வந்தவள் என் அம்மா மற்றும் அப்பாவிற்க்கு இடையில் அமர்ந்துகொண்டாள்
கருத்து எழுதுங்கள்