இக்கதை பிடித்திருந்தாலோ, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ கீழுள்ள இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
badboyravana1@gmail.com
அப்போது எனக்கு வயது 19 கல்லூரியில் B.A. English literature இரண்டாம் ஆண்டு கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்தேன். என் பெயர் ” இராவணன்”. எனக்கு புத்தகங்கள் என்றால் அலாதி பிரியம். ஒரு புத்தக காதலன் என்று கூட என்னை சொல்லலாம்.
அதனால் தான் English literature ஐ தேர்வு செய்து படிக்கின்றேன். படிப்பு மட்டும் அல்ல நான் விளையாட்டிலும் எனக்கு அலாதி காதல் என்று கூட சொல்லலாம். நான் கால்பந்து விளையாட்டு வீரன். கால்பந்து என்றாலே அது ஒரு முரட்டுத்தனமான விளையாட்டு.
எதற்கெடுத்தாலும் சண்டைகள் எக்கச்சக்கமாக வரும். விளையாடி முடிப்பதற்குள்ளேயே எக்கச்சக்கமாக சண்டைகள், அடிதடி நடக்கும். கால்பந்து பற்றி தெரிந்தவர்களுக்கு அது எவ்வளவு பெரிய முரட்டுத்தனமான விளையாட்டு என்பது நான் சொல்லி தெரியத்தேவையில்லை. எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்ததற்கு காரணம் நான் ஒரு முரடன்.
சண்டைகள் போடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கால்பந்து விளையாடும் போது பல தடவை எதிர் டீம் ப்ளேயரின் மூக்கையும், வாயையும் உடைத்து இருக்கிறேன். அதனால் எனக்கு பல தடவை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவார்கள்.
நான் இப்படிப்பட்ட முரடன் என்பதால் என்னிடம் பெண்கள் பேசவே பயப்படுவார்கள். ஆனால்,சைட் மட்டும் நன்றாக அடிப்பார்கள். கால்பந்து விளையாட்டு வீரன் அல்லவா நான். என் உடலை எப்படி வைத்திருப்பேன் என்பதை உங்களால் யூகிக்க முடியும்.
எனக்கு கோபம் பயங்கரமாக வரும் அதை நான் எனது உடற்பயிற்சியில் காட்டிக்கொள்வேன். நான் மிகவும் ஆக்ரோசமாக உடற்பயிற்சி செய்வேன். நான் உடற்பயிற்சி செய்வதை பார்த்தாலே சிலர் பயந்து விடுவார்கள். அதேபோல் நான் கல்லூரியில் எந்த ஒரு பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்.
என்னிடம் பெண்கள் அவர்களாக வந்து பேசுவார்கள் நான் Ok, thank you என்ற வார்த்தைகளுக்கு மேல் வேறு எதுவும் பேச மாட்டேன். என்னை பார்த்தாலே எப்போதும் சண்டைக்கு தாயாராக இருக்கும் போர் வீரனைப்போல் இருப்பேன். அதனால், என்னை பல பெண்களுக்கு பிடிக்கும் ஆனால், என்னிடம் பேச பயப்படுவார்கள்.
ஏன், சில ஆண்களே என்னிடம் பேச பயப்படுவார்கள். ஆனால், நான் எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன். அனைத்து பெண்களையும் பார்ப்பதை விட, ஒரு பெண்ணையும் பார்க்காமல் இருப்பது ஒரு தனி போதை அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
நாம் எந்த பெண்ணையும் பார்க்காமல் இருந்தால் நம்மை அனைத்து பெண்களும் பார்ப்பார்கள். உதாரணம் நான். ஆனால், படிப்பதிலும் நான் நன்றாக படிப்பேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. ஏனென்றால், எனக்கு கூட்டமாக இருப்பது பிடிக்காது.
தன்னந்தனியே சிங்கத்தை போல இல்லை இல்லை ஓநாயை போல இருப்பதே எனக்கு பிடிக்கும் ஆங்கிலத்தில் என்னைப்போன்றோரை “Lone wolf” என்று அழைப்பார்கள். காலங்கள் ஓடியது. எந்த பெண்ணின் மீதும் காதல் வரவில்லை. அப்போது ஒரு நாள். எனக்கு class staff ஒரு பெண்ணை அறிமுக படுத்தினார்கள்….
Staff: Hello students, This is “Angel grace”. This is our new class mate. He disconnected from other college and joined our college. Welcome her.
அவள் முகத்தை முதல் முறையாக பார்த்தேன். அந்த தருணம் கோடான கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத தருணம். அவளின் கூச்ச சுபாவம் என்னையும் மறந்து அவளை இரசிக்க செய்தது. முதன் முதலில் ஒரு பெண்ணை என்னை மறந்து இரசிக்க தொடங்கினேன்.
அவளின் கண்களை பார்க்கும் போது இறைசக்தியை உணர்ந்தேன். பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளை (black hole) போன்று இருந்த அவளின் கருவிழிகள் என் ஆன்மாவை உடலை பிரித்து அவளின் கண்களுக்குள் இழுத்தது. இதயம் துடிக்கவில்லை துடிதுடித்தது.
இவளை பார்க்கும் போது மட்டும் ஏன் என் உடலினுள் என்ன என்னவோ நடக்கிறது. இதுதான் “காதல்” போல. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணரத்தான் முடியும். உங்கள் கண்களை மூடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதன் முதலில் காதல் கொண்ட நபரை நினைத்து பாருங்கள். கண்களில் கண்ணீரே வரக்கூடும். வாருங்கள் என்னவளை பற்றி விவரிக்கின்றேன்.
அவளின் கண்கள் எவ்வளவு பெரிய கல் நெஞ்சனாக இருந்தாலும் அவளின் சிற்பத்தை உழி போன்ற அவள் விழிகளால் கல் நெஞ்சத்தில் செதுக்கி விடுவாள். இலக்கணமும் திக்குமுக்காடும் அவளின் இதழ்களை பற்றி விவரிக்க. இப்படி அவளைப்பற்றி வர்ணித்துக்கொண்டே இருக்கலாம்.
சரி வாருங்கள் என் கற்பனை உலகத்தை விட்டு,விட்டு இந்த கதை நடக்கும் உலகிற்கு செல்வோம். என் வகுப்பறையில் ஆண்,பெண் என்று பேதமில்லாமல் இருவர் மட்டும் உட்காரும் வகையில் இருக்கும். அனைவரும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து இருப்பார்கள்.
நான் முதல் டெஸ்கில் உட்கார்ந்து இருந்தேன். நான் தான் தனிக்காட்டு சிங்கம் ஆயிற்றே தனியாக நான் மட்டும் உட்கார்ந்து இருந்தேன். கடவுள் நம்பிக்கையே இல்லாத நான் இவள் என்னருகில் அமர வேண்டும் என்று அனைத்து கடவுளையும் வேண்டினேன். என் வேண்டுதலுக்கு அனைத்து மத கடவுள்களும் செவி சாய்த்தன. அவள் சுற்றி முற்றி பார்த்தாள். எங்கேயுமே அவள் உட்கார இடமில்லை. என்னருகே மட்டும் இடம் இருந்தது. எனது class staff….
Class staff: Come on, angel don’t feel shy. Go and sit with Ravana. No one’s going change their place for you.
அவள் தயங்கி தயங்கி என்னுருகில் வந்தாள். இவளின் அழகால் என்னை அழவைத்து விடுவாள் போல். என் அருகில் தயங்கி அமர்ந்தாள். அவள் என்னருகில் அமரவில்லை என் இதயத்தினுள் அமர்ந்தாள். அவளை கவனிப்பதை விடுத்து எனது பாடத்தை கவனிக்க ஆரம்பித்தேன். Lunch break வந்தது.
எங்கள் கல்லூரியில் Ragging கொடுமைகள் அதிகமாக நடக்கும். அவள் புதிதாக வந்த பெண் என்பதாலும் பார்ப்பதற்கு பச்சைக் குழந்தை போல் இருப்பதாலும் அவளை Ragging செய்ய எனது வகுப்பறை ஆண்கள் மற்றும் பெண்கள் வந்தனர். அவள் மிகவும் பயந்து அரண்டு இருந்தாள்.
அவளிடம் சக மாணவிகள் கேள்வி கேட்க தொடங்கினார்கள். அவள் உதடுகள் நடுநடுங்கியது. அவள் வம்பிழுக்க ஆரம்பித்தார்கள். அவள் கண்கள் கலங்கியது. என் இதயத்தினுள் கீறல் விழுந்தது. நான் படார் என்று எனது டெஸ்க்-ஐ தட்டினேன். அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். அவள் பயத்தில் அதிர்ச்சி அடைந்து போனாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது….
நான்: If anybody tease her again. I’d broke your jaw and decompose your skull. Don’t hurt her.
அவள் அழுதுக்கொண்டே என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் வரும் கண்ணீரே எனக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லியது. அனைவரும் பயந்து ஓடி விட்டார்கள். அவளும், நானும் மட்டும் தனியாக அமர்ந்திருந்தோம். அவளிடம், பேசத்தொடங்கினேன்.
நான்: Hello angel grace. I’m Ravana. Nice to meet you.
ஏஞ்சல்: good to meet you. Thank you so much for what you did for me.
நான்: சரி அழுகுறது முதல நிப்பாட்டுங்க, எனக்கு பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.
தனது கண்களை துடைத்துக்கொண்டாள்.
ஏஞ்சல்: நான் அழுதா உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு.
நான்: குழந்தைங்க அழுவுறத பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் அதான்.
ஏஞ்சல்: நான் உங்களுக்கு குழந்தையா? இவ்வளவு பெருசா இருக்க என்ன பாத்து இப்படி சொல்லுரிங்க.
நான்: வளந்த மட்டும் போதுமா என்ன? சரி வா சாப்பிட போலாம்.
ஏஞ்சல்: But I don’t have any experience in eating with boys. Is it okay for you?
நான்: I don’t have any experience in eating with humans too. Is it okay for you?
ஏஞ்சல்: உங்க friends கூட போய் சாப்பிடுங்க. நான் தனியாவே சாப்பிட்டுக்குறேன்.
நான்: எனக்கு friends-னு யாருமே இல்ல. எனக்கு mostly human’s நாளே பிடிக்காது. நீ தனியா சாப்பிட போவ அங்க யாராச்சும் உன்ன Ragging பண்ணுவாங்க தேவையா உனக்கு. பேசமா வா நான் சாப்பாடு சாப்பிட தான் கூப்பிடுறேன். உன்ன சாப்பிட இல்ல.
ஏஞ்சல்: சரி சரி வரேங்க. சேர்ந்தே சாப்பிடுவோம்.
நானும் அவளும் சாப்பிட ஆரம்பித்தோம். நான் வேகமாக சாப்பிட்டு முடித்தேன். அவள் சாப்பிடும் அழகை பார்த்து இரசித்துக்கொண்டு இருந்தேன்.
நான்: நான் இருக்கேன்னு shy அ feel பண்ணாத நல்லா சாப்பிடு என்ன.
ஏஞ்சல்: ஐயோ, அப்பெடியெல்லாம் இல்ல. நான் குட்டி குட்டியா தான் சாப்பிடுவேன்.நான் குட்டி பாப்பா. ஐயோ உளறிட்டேனே. Sorry, sorry.
நான்:நீ உன்மையிலேயே குட்டி பாப்பா தான் சாப்பிடுறதே இவ்வளவு அழகா இருக்கு.
ஏஞ்சல்: நா சாப்பிடுறத கண்ணு வைக்காதிங்க. சரி, உங்களுக்கு தான் Human’s நாளே பிடிக்காது சொன்னிங்க. என்கிட்ட மட்டும் எப்படி பேசுறிங்க.
நான்: நீ தான் angel ஆச்சே. அதான் உன்கிட்ட பேசுறேன். உங்க அப்பா கரெக்ட் ஆ தான் பேரு வச்சுருக்காரு.
ஏஞ்சல்: அட ஆமா, நான் Angel ங்குறத மறன்டேன். மன்னுச்சுங்கோங்கோ.
இன்னும் மழலை மாறாத அவள் பேச்சு அவளை கொஞ்ச வேண்டும் என்று என்னை தூண்டியது.
நான்: சரி, உனக்கு Boy friends யே இல்லையா?
ஏஞ்சல்: நான் சின்ன வயசுல இருந்து படுச்சது எல்லாமே Girls school and girls college. So, இதுனால எனக்கு பசங்க நாளே பயம் வந்துருச்சு. அதான் என் parents என்ன இந்த college-ல சேர்த்து விட்டுருகாங்க.
நான்: Boys கிட்டயே பேசுனது இல்லையா?
ஏஞ்சல்: என் family relations -ல இருக்க எல்லா Boys, uncles-னு எல்லார் கிட்டயும் பேசுவேன். ஆனா, male friends-னு யாரும் இல்ல. எனக்கு family realtion -அ தவிர வேற புதுசா எந்த பையன் கிட்ட பேசணும்னாலும் பயம். அந்த பயம் போகத்தான் இந்த college -ல சேர்த்து விட்டுருக்காங்க. Basically I’m from orthodox Christian family I hope you understand.
நான்: yeah I understand. சரி, என்கிட்ட எப்படி பேசுற.
ஏஞ்சல்: Actually Ravana -னு உங்க பெயர கேக்கும் போதே பயமா இருக்கு. ஆனால், இராவணன் மாதிரி ஒழுக்கமா நீங்களும் இருக்கீங்க. உங்க கிட்ட ஏதோ different vibes கிடைக்குது. உங்க கிட்ட ரொம்ப close இருக்க மாதிரி ஃபீல் கிடைக்குது. More importantly I behave like me. I don’t need to act infront of you. சிலதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது Mr.Ravana.
நான்: சரி, இனிமேல் இந்த காலேஜ்-ல உன்ன யாராச்சும் மிரட்டுணா நா இராவணன்-ஓட friend -னு சொல்லு. உனக்கு ஏதாச்சும் Nick name வைக்கணுமே. என்ன வைக்கலாம்?
ஏஞ்சல்: அதான் குட்டி பாப்பா இருக்குல அப்புறம் என்ன?
நான்: நீ குட்டி இல்ல. குட்டியவிட குட்டியா இருக்க Micro. நீ micro papa.
ஏஞ்சல்: ok பெரிய பாப்பா.
நான்: நா உனக்கு பெரிய பாப்பா வா?
ஏஞ்சல்: உங்க கிட்ட நான் நானாவே இருக்கேன்-ஆ அதான் என் வாய கண்ட்ரோல் பண்ண முடியல. மன்னுச்சுக்கோங்கோ.
நான்: It’s ok. இனிமேல் யாரு உன்ன ragging பண்ணாலும் என்ன சொல்லுவ?
ஏஞ்சல்: I’m Ravana’s best friend.
நான்: Good girl.
நாட்கள் நகர்ந்தது. நானும் அவளும் மிகவும் நெருக்கமாகினோம். வாரங்கள் சென்றன. ஒரு நாள் என்னிடம் கேட்டாள்…..
ஏஞ்சல்: இராவணா? நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன். உண்மைய சொல்லனும் சமத்துக்குட்டியா என்ன?
நான்: கேளு Micro.
ஏஞ்சல்: உனக்கு உண்மையிலேயே girl friends இல்லையா? எந்த பொண்ணயும் லவ் பண்ணது இல்லையா? இப்ப கூட பாரு உன்ன எப்படி பாக்குறாங்க-னு.
நான்:school படிக்கும் போது சுவஸ்திகா-னு ஒரு பொண்ண லவ் பண்ணேன். ஆனால், அப்போ இந்த மாதிரி-லா இருக்க மாட்டேன். Normal ஆன பையன்.
எனக்கு ஒரு பெஸ்ட் பிரண்ட் இருந்தான் அசோக்-னு. என் பெஸ்ட் பிரண்ட்-யே எனக்கு துரோகம் பண்ணிட்டான். I find out ashok had sex with swastika. அப்போ இருந்து நான் இப்படி தனியாவே இருக்க ஆரம்பிச்சுட்டேன். ஃப்ரெண்ட்ஸ்-ம் வேண்டாம் லவ்-ம் வேண்டாம்-னு.
ஏஞ்சல்: I’m really sorry Ravana. Now, I understand why you love to be all alone.
நான்: It’s ok leave it Micro.
நாட்கள் நன்றாக நகர்ந்தது. நானும் அவளும் மிகவும் நெருங்கி பழகினோம். எங்கள் கல்லூரியில் Football tournament நடந்தது. நாங்கள் இரு Goal அடித்தோம். எதிரணியினர் ஒன்றும் அடிக்கவில்லை. எதிரிணயில் ஒருவன் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் மல்லுக்கட்ட பார்ததுக்கொண்டிருந்தான்.
ஆனால், ஒரு பெண்ணின் கண்கள் மட்டும் ஆட்டத்தை இரசிக்காமல் என்னை மட்டும் இரசித்துக்கொண்டு இருந்தது. அவள் தான் எனது ஏஞ்சலின் கண்கள். மேட்ச் முடியும் நேரம் வந்தது. என்னுடன் மல்லுக்கட்ட பார்த்த ஒருவன் என் கால்களை வாரிவிட்டு எனது நெஞ்சின் மீது அவனின் Football Feet என்ற சிறிய, சிறிய இரும்பு முட்கள் பொதிக்கப்பட்ட shoe வை வைத்து நன்றாக அழுத்தி விட்டான்.
அதனால் எனது நெஞ்சில் இருந்து இரத்தம் வர தொடங்கியது. எனது டீசர்டும் சிறிது கிழிந்து விட்டது. நான் வேகமாக எழுந்தேன். அப்படியே அவனை முட்டிமோதி தூக்கினேன். அவன் கீழே விழுந்தான் நான் அவன் மீது அமர்ந்திருந்தேன். அவனின் முகத்தில் குத்த ஆரம்பித்தேன். எனக்கு வெறி உச்சத்திற்கு ஏறியது அவன் முகத்தை வெறி பிடித்தது போல் குத்தினேன்.
அவனின் தாடயையும், மூக்கும் உடைந்து விட்டது. அவன் முகம் சற்று சிதைந்தே போனது. எனது டீம் பிளேயர்களும் அவன் டீம் பிளேயர்களும் என்னை விளக்கினார்கள். அவன் மயக்கமடைந்து விட்டான் குத்திய குத்தில்.
என் முகத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதால் அவனுடைய இரத்தம் என் முகத்தில் சற்று தெரித்து இருந்தது. எங்கள் டீம் டீசர் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவள் என் நெஞ்சில் மிதித்ததால் இரத்தம் வர தொடங்கியது. என் முகமும் என் டீசர்டும் இரத்தமாக இருந்தது.
என் அருகில் வருவதற்கே அனைவரும் பயந்தனர். அனைவரும் என்னை அரக்கனை பார்ப்பதை போல் பார்த்தார்கள். கோபம் வந்தால் அரக்கனாக மாறிவிடுவேன். என்னை என் சீனியர் தெளஃபிக் முதலுதவி சிகிச்சை செய்ய கூட்டிச் சென்றார்.
தெளஃபிக்: Hey Ravana you have to controll your anger da.
நான்: Mate, you seen what happened over there. That’s not my bloody fault at all.
தெளஃபிக்: It’s ok da I understand. What happened over there. It’s not your fault. ஆனால், நீ அவன அடிக்குறத பாத்து எல்லாருமே பயத்துட்டோம். I thought you killed that poor basterd.
நான்: யாரும் தடுக்கலைனா. He might be a dead body right now.
ஒரு பெண் தயங்கி தயங்கி அந்த அறையினுள் வந்தாள். அவள் என் ஏஞ்சல் தான். அவள் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் பதட்டத்துடனும், பயத்துடனும் இருந்தாள். நான் எனது டீசர்ட்டை-ஐ கழட்டி போட்டு உட்கார்ந்து இருந்தேன். எனது கட்டுடலை இரத்தத்துடன் அவள் பார்க்கின்றாள். அவளின் கண்களே காட்டிக் கொடுத்தது பயம், பதட்டம், ஏக்கம் என மூன்றும் கலந்த பார்வையால்.
தெளஃபிக்: இங்க பாருடா உன் ஆளே வந்துட்டா.
நான்: Mate she’s not my lover, she’s just my friend. That’s all mate.
தெளஃபிக்: டேய், இந்த பொண்ணு புதுசா இருந்தாளே-னு Ragging பண்ண கூப்ட்டேன். இவ தான் சொன்ன நான் இராவணன் -ஓட ஆளு-னு. என்கிட்ட மட்டும் இல்ல காலேஜ் முழுக்க அதா சொல்லிருக்கா.
கருத்து எழுதுங்கள்