shrutihassan akkul சுருதி ஹாசன் தான் தன்னை காப்பாற்றி ஆஸ்பத்ரியில் சேர்த்தது என தெரிந்து ஒரு பக்கம் சர்மாவிற்கு ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அவருக்கு கோபமாகவும் இருந்தது ஏன் இவள் எப்ப பாத்தாலும் எனக்கு இடைஞ்சலாவே வரா இவ மட்டும் என்னையே காப்பத்தட்டி நான் இந்நேரம் நிம்மதியா போயி சேந்து இருப்பேன் .
அதுக்கு அப்புறம் மீண்டும் நர்சிடம் ஒரு சந்தேகத்தோடு கேட்டார் .நிஜமாவே அந்த பொண்ணுதான் என்னையே காப்பதுச்சா என கேட்டார் .ஆமா சார் அவங்கதான் உங்கள இங்க கொண்டு வந்து சேத்தாங்க கொஞ்சம் பொறுங்க இந்தா அவங்களேயே கூப்புடுரென் நீங்களே கேட்டுகொங்கன்னு சொல்லி நர்ஸ் போனாள் ,
இவர் அந்த நர்சிடிம் வேண்டாம் என்று சொல்வதற்குள் அவள் வெளியே போய் ஸ்ருதியிடம் மந்திரி சர்மா கூப்புடுவாதாக சொன்னாள் .ஸ்ருதி தயங்கி கொண்டே உள்ளே வந்தாள் .சாரி சார் நான்தான் உங்கள காப்பத்துனதுன்னு தெரிஞ்சாலும் நீங்க கோபபடுவீங்க நான் இங்க இருக்கிறதும் உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும் அதான் நீங்க முழிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம்ன்னு பாத்தேன் .
ஆனா அன்னைக்கு மேடைல உங்கள பத்தி கேட்டதும் அப்புறம் நீங்க பேசுனதையும் கேட்டதுல இருந்து எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி என்னடா ஒரு நல்லவர எல்லார் முன்னாடியும் திட்டிட்டோம்ன்னு அதனால் அன்னைக்கே சாரி கேக்கலாம்னு நினைச்சேன் .ஆனா நீங்க வேணும்னே யார் கூடவொ பேசுற மாதிரி என்னையே avoid பண்ணிட்டு போயிட்டிங்கே .
எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு இனி மேல் உங்க கிட்ட சாரி கேக்க முடியுமோ முடியாதோன்னு .
ஆனா இன்னைக்கு காலைல இங்க ஒரு இடத்துல ஷூட்டிங் போறப்ப ஒரு கார் ஆக்சிடென்ட் ஆகி இருந்தச்சு நான் யார் அதுன்னு பாத்தா நீங்க எனக்கு ஒரு நிமஷம் ஆடி போயிட்டேன் .அப்புறம் உங்கள என் கார்ல இங்க கொண்டு வந்து சேத்தேன் .ஆனா நிசமா நான் உடனே போயிட்லாம்னுதான் நினச்சேன்
ஆனா உங்கள தனியா விட்டு போக மனசு இல்ல .உங்க வீட்டுக்கு தகவல் சொன்னேன் அங்க யாரும் போன் எடுக்கல .அதனால நான் என் டிரைவர் மூலம் சொல்லி அனுப்பி இருக்கேன் அவங்க வந்ததுக்கு அப்புறம் போலாம்னு பாத்தேன் அதுக்கு முன்னாடி நீங்க எந்த்ருசுட்டிங்கே
அதனால என் சாரிய இப்பயாச்சும் உங்க கிட்ட கேட்டுர்லாம்னு வந்தேன் .சார் என்னதான் நீங்க மந்திரியா இருந்தாலும் அன்னைக்கு பிளைட்ல நீங்க போன் பேசனது தப்பு .
இன்னும் இவளுக்கு திமிர் குறையவே இல்லை என்று சர்மா மனதில் நினைத்து கொண்டார் .அதே நேரத்துல நானும் அன்னைக்கு உங்கள அத்தன பேர் முன்னாடியும் திட்டனது ரொம்ப தப்பு அதுனால என்னையே மன்னிச்சுடுங்க ஐ அம் வெரி வெரி சாரி சார் என்றாள்
ஆனால் சர்மா அதை கேட்காதது போல தலையை அந்த பக்கம் திருப்பி கொண்டார் .சரி சார் நீங்க இன்னும் என்னையே மன்னிக்க தயாரா இல்லைன்னு நினைக்கறேன்.இருந்தாலும் பரவ இல்ல நான் உங்க கிட்ட இன்னொன்னும் சொல்லனும்னு நினைச்சேன் .அன்னைக்கு பங்சென்ல உங்க ஸ்பீச் அமைசிங் சார் என்றாள்
அதை கேட்ட உடன் சர்மா திரும்பி படுத்து இருந்தாலும் முழித்து அவள் சொல்ல வருவதை ஆர்வமாக கேட்டார் .என் லைப்ல இது மாதிரி ஒரு ஸ்பீச் நான் கேட்டதே இல்ல சார் எவளவு தூரம் நீங்க எனக்கு இன்ஸ்பைர் பன்னிருக்கேங்கே தெரியுமா உணமைலே உங்க பேச்சை கேட்டதுக்கு அப்புறம்தான் உங்க மேல மரியாதையே வந்துருக்கு என்றாள் .
என்ன அந்த பேச்சாலதான் வீட்ல மாமனார் கிட்ட திட்டு வாங்கி என் மரியாதையே போயி அசிங்க பட்டு நின்னேன் .இவ அந்த பேச்ச இவளவு தூரம் புகழ்றா உண்மையாதான் பிடிச்சுருக்குன்னு சொல்லி புகழ்றலா என்று மனதிற்குள்ளே நினைத்தார்
குறிப்பா அந்த சுயநலத்துல பொதுநலம் கலந்து இருக்கணும்ங்கிற மேட்டர் சூப்பர் சார்.இனி மேல் நானும் அத பாலோ பண்ண போறேன் என்றாள் .அதை கேட்டு சர்மா மிகவும் உணர்வு புர்வமாக ஆனார் .ஆனால் அவர் அந்த பக்கம் திரும்பியுள்ளதால் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை .அதன் பின் வெளியே இருந்து நர்ஸ் வந்து மேம் சார் வீட்ல இருந்து ஆள் வந்துட்டாங்க என்றாள் .
ஓகே சார் உடம்ப பாத்துக்கொங்க take care நான் வரேன் சார் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்
அதன் பின் சர்மாவின் மனைவியும் அவர் மகனும் அலட்சியமாக வந்தார்கள் .மனைவி வந்து ஒன்னும் பேச வில்லை .சும்மா பார்த்து விட்டு அப்படியே சேரில் உக்காந்தாள் ,மகனும் ஒன்றும் பேசமால் இன்னொரு சேரில் உக்காந்து வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான் .அதுக்கு அப்புறம் சர்மாவின் பியே கதவை தட்டி சர்மாவின் மனைவியிடம் அனுமதி வாங்கி கொண்டு உள்ளே வந்தான் .
எப்படி இருக்கீங்க சார் என கேட்டான் .பரவல அஜய் என்றார் சர்மா .பாத்து வண்டி ஓட்ட கூடாதா சார் என்றான் .அவர் எதுவும் சொல்லமால் ம்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார் .
அதன் பின் அஜய் யாருடனோ போனில் பேசிவிட்டு சர்மாவின் மனைவியிடம் சொன்னான் ,மேம் சார பாக்க பிரஸ் வாரங்க அதனால நீங்க கொஞ்சம் அவர் பக்கத்துல போயி நில்லுங்க சார் நீங்க கொஞ்சம் தூங்குங்க நான் நீங்க மயக்கத்துல இருக்க மாதிரி இருக்கும் .
அத வச்சு நான் பிரஸ் ஆளுகள சமாளிச்சு கிடுவேன்,அதன் பின் சர்மா அவன் சொன்னது போல மெல்ல கண்ணை மூடி கொண்டார் .சர்மாவின் மனைவி அவர் அருகே உக்காந்து கொண்டு அவர் மகனையும் கூப்பிட்டாள் .இங்க வாடா என்று .
கருத்து எழுதுங்கள்