உடலில் ஊடுறுவிப் பரவி பற்களையும் விரல் நுனிகளையும் இறுகச் செய்யும் இளங் குளிர் காற்றில் பேசியபடியே மிதமான வேகத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது. கமலி குளிரைத் தவிர்க்க நிருதியுடன் அணைந்தது போல அவன் முதுகின் பின்னால் நன்றாக மறைந்திருந்தாள். மிதமான வேகம் என்றாலும் அவ்வப் போது அவளின் முலைப் பந்துகள் முன்னால் போய் அவன் முதுகில் மெல்ல முத்தமிட்டு திரும்பிக் கொண்டிருந்தன.
அது அவள் அறியாமல் ஒன்றும் நிகழவில்லை என்றாலும் அதை பெரித படுத்தும் நிலையில் இல்லாமலிருந்தாள். ஆடை நுனியின் படபடப்பை மீறி அவனின் முதுகில் உரசும் முலையின் முனைப் புள்ளியில் ஒரு சிறு பூச்சி ஊர்வது போல உணர்ச்சி உருவாகி அவளறியாத ஒரு கிளர்ச்சி அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.. !!
ஒரு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி ரோட்டின் ஓரமாக கொஞ்சம் உள்ளே தள்ளி டாஸ்மாக் இருந்தது. அதை நெருங்கியதும் தலையைப் பின்னால் திருப்பிக் கேட்டான் நிருதி.
“பீருக்கு காசு குடு கமலி”.
“இங்கயேவா?” அவனை உரசியபடி சைடில் எட்டிப் பார்த்துக் கேட்டாள்.
“அப்றம் எங்க தருவ?”
“அயோ அத கேக்கல. இங்கியே குடிக்கறீங்களானு கேட்டேன்”.
“அப்படி தெளிவா கேளு. இங்க குடிக்கல. போற வழி தான வாங்கிட்டே போயிடலாம். மறுபடியும் திரும்பி எவன் வரது”.
“சரி ஓரமா நிறுத்துங்க. நான் எங்க நிக்கறது”.
“இரு..” என்று சிறிது தூரம் முன்னால் போய் அருகிலிருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினான். அவன் முதுகில் முலையுரசி கை தொட்டு இறங்கினாள். காற்றில் கலைந்த தன் தலைமுடியை ஒதுக்கி துப்பட்டாவை சீர் செய்தாள். உள்ளே அவள் பெண்மை கிளர்ந்து விட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.
உடல் கிளர்வின் கிறக்கத்தில் அவளின் உள்ளமும் கிளர்ந்திருந்தது. மென் காமம் அவள் குளிருடலைத் தழுவி இதமளித்துக் கொண்டிருந்து. இறங்கி நின்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டபோது அதில் கூட ஒரு சுகம் இருப்பதாய் தோன்றியது. அந்த பெண்மைக் கிளர்ச்சி அவளுக்கு இன்னும் தேவையாயிருந்தது.. !!
பஸ் ஸ்டாப்பை ஒட்டி மளிகை கடை பெட்டிக் கடை எல்லாம் இருந்தது. கமலி சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டி விட்டு மெல்ல நகர்ந்து விளக்கு வெளிச்சத்தில் திரும்பி பர்ஸிலிருந்து பணம் எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“ம்ம்”.
“ரெண்டு வாங்கி தரேன்ன?” என்று சிரித்தபடி கேட்டான் நிருதி.
“நெஜமாவே ரெண்டு வேணுமா?” லேசான சிணுங்கலுடன் அவனைப் பார்த்தாள்.
“காசிருந்தா குடு”.
“என்ன மாமா நீங்க.. நெஜமாவே வேணுமா?”
“என்கிட்டயே காசிருக்கு. ஆனா நீதான ரெண்டே வாங்கி தரேன்ன. சம்பளம் வந்தாச்சில்ல? காசிருக்கப்பவே குடுத்துரு”.
“நான் சாப்பிட கடைல ஏதாவது வாங்கலாம்னு நெனைச்சேன்” குரல் நெகிழச் சிணுங்கினாள். அந்தச் சிணுங்கல் அவளுக்கே பிடித்தது. காமம் கொள்ளும்போது மட்டுமே வெளிப் படும் குரலில் இருக்கும் சிணுங்கல் அது.
“என்ன வேணும்?” எனக் கேட்டான்.
“நைட் டிபன்?”
“அது நான் வாங்கி தரேன்”.
“அப்படியா? அப்ப பிரியாணி” என்று சிரித்தாள்.
“சரி. சில்லியோட வாங்கி தரேன்”.
“ஓகே. மாமானா மாமாதான்” என்று சிரித்தபடி ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள் கமலி.
வாங்கியபின் “டீ ஏதாவது குடிக்கறியா?” என்று திரும்பி கடைகளின் வரிசையைப் பார்த்தான்.
“ஏன்?” அவளும் பார்த்தாள்.
“நான் வாங்கிட்டு வரவரை நீ இங்க நிக்கணுமில்ல?”
“எவ்ளோ நேரம் ஆகும்?”
“ரெண்டு நிமிஷத்துல வந்துருவேன்”.
“அவ்ளோதானே? பரவால.. நிக்கறேன் வாங்க”.
“ஓகே. வெய்ட் பண்ணு வந்தர்றேன்” என்று விட்டு சர்ரென பைக்கைத் திருப்பிப் போனான் நிருதி.. !!
கமலி அவன் முதுகில் கண் பதித்து தன்னை மறந்து அவன் போவதையே பார்த்தபடி நின்றாள். அவன் வளைவில் திரும்பி பார்வையிலிருந்து மறைந்ததும் தனது நெஞ்சில் கனமேற்றியிருக்கும் மென் முலைகள் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு விட்டுத் திரும்பிப் போய் பஸ் ஸ்டாப் படியின் ஓரமாக நின்றாள்.
காற்றில் பரவியிருக்கும் பனியின் குளிரை உணர்ந்து பேகை மார்பில் அணைத்து கைகளைக் கட்டிக் கொண்டாள். பேகின் அணைவு முலைகளுக்கு இதமளித்தது. அவளின் மனம் ஏனோ நிலையழிந்து தவிப்பதை உணர்ந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனசு முட்டி மோதியது.
சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பின் உள்ளாழத்தை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது. உடல் விதிர்த்து கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது. கைகளை இறுக்கி கால்களை அழுத்தி பலமாக்கி நின்றாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து முலைகள் விம்மியெழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள்.
அந்த பெருமூச்சின் உளத் தவிப்பை அவளே உணர்ந்தாள். உணரப் பட்டதும் அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது. உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன்னைச் சுற்றிலும் அர்த்தமின்றி ஒரு பார்வை பார்த்தாள்.
கடைகளிலும் பஸ் ஸ்டாப்பிலும் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து விட்டு தன் நிலையுணர்ந்து மெல்ல நடந்து பெட்டிக் கடையை அணுகினாள். பேகின் முன் பக்க ஜிப்பை ஓபன் பண்ணி இரண்டு பெரிய சாக்லெட்களை வாங்கி பேகில் போட்டுத் திரும்ப, நிருதி அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தினான்.
“போலாமா?” அவளைக் கேட்டான்.
“வாங்கிட்டிங்களா?” அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“ம்ம்” நேராக அவள் முகம் பார்த்துச் சிரித்தான். அந்த சிரிப்பு கவர்ச்சியாய் தோன்றியது. அவன் சிரிப்பில் வெளிப் படும் ஆண்மையின் எளிமையை உணர்ந்து அவள் மனம் அவனிடம் சரணடைந்தது. அவனிடம் ‘கர்வம், ஆணவம், தலைக் கனம்’ என்ற ஒன்று இருப்பதாய் அவள் உணர்ந்ததே இல்லை. எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் சிரிப்பான்.
எப்போதுமே சிரித்து பேசும் ஒரு ஆணை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?
சட்டென அவள் பெண்மை கிளர்ந்து அவனை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையை அவள் உள்ளத்தில் எழுப்பியது. உளக் கற்பனையில் உடனே அவனை முத்தமிட்டுக் கேட்டாள்.
“ரெண்டா?” எனக் கேட்டாள்.
“ஆமா “.
“பெரிய ஆளுதான் மாமா நீங்க” சிரித்தபடி துப்பட்டாவை மேலே இழுத்து விட்டாள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு முலை மட்டும் வெதும்பித் தெரிந்தது. அவன் பார்வை அதைத் தொட்டு விலகியதை கவனித்து இயல்பாக சிரித்தபடி அவன் தோளில் கை வைத்து அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். தொடை அவன் பின் பக்கத்தில் உரச மெல்லத் தன் முலையை அவன் மேல் வைத்து தேய்த்தபடி அசைந்து நேரானாள்.
“போங்க”.
வண்டியை நகர்த்தினான் நிருதி.
“நீ என்ன வாங்கின?”
“சாக்லெட்”.
“புள்ளைக்கா?”
“ம்ம்”.
“இப்ப மாமியா வீட்டுக்கு போவியா?”
கருத்து எழுதுங்கள்