கடலில் மூன்றாவது நாள்:
சூரியன் உதித்தது.
சாக்ஷி எழுந்தாள்.
அவள் காலை கடனை எல்லாம் முடித்து விட்டு.
சில மணி நேரம் கழித்து டேய் எந்திரிடா என என்னை கையில் டீ கப் உடன் வந்து எழுப்பினாள்.
நான் கண்ணை கசக்கி கொண்டு எழுந்தேன்.
நான் சாக்ஷி யை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு போனேன் வியந்து போனேன் என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை அவளை பார்த்து கிறங்கி போனேன்.
சாக்ஷி தலைக்கு குளித்து ஈரத்துணியை தலையில் கட்டி ஆரஞ்சு நிற புடவை அணிந்து கையில் டீ டம்ளர் உடன் நின்று இருந்தாள்.
அதை வாங்கி அவளை பார்த்தபடியே குடித்தேன்.
அவளும் தலையை கீழே குனிந்தப்படி வெட்க பட்டாள்.
நான் அவளை என் பக்கத்தில் இழுத்து அனைத்து உட்கார வைத்தேன்.
நன்றாக அவள் மேல் ஷாம்பு சோப்பு வாசனை வந்தது.
நான் டீ யை குடித்து விட்டு அவள் முடியை முகர்ந்தேன்.
அவள் டக்கென எழுந்தாள்.
போய் குளிச்சிட்டு வா என்றாள்.
நான் சரி என்றேன் பிண்பு தான் ஞாபகம் வந்தது.
சுற்றியும் உப்பு தண்ணீர் தான் குளிக்க நல்ல தண்ணி வேணும் இவ எப்படி குளிச்சா என யோசித்தேன்.
அதற்குள் சாக்ஷி தீவுக்குள் சென்றாள்.
நானும் போக நகர்ந்தேன்.
காலில் டீ கப் தட்டுப்பட்டது.
மறுபடி குழப்பம் பால் இல்லாம எப்படி டீ போட்டா.
சரி அவளையே கேட்கலாம் என கீழே இறங்கி தீவுக்குள் போனேன்.
சாக்ஷி இளநீர் எடுத்துக்கொண்டு என்னை கடந்து படகிற்கு போனாள்.
நானும் அவள் பின்னாலேயே போனேன்.
நான் படகில் ஏறினேன் அவள் கடலை பார்த்தபடி நின்று இருந்தாள்.
நான் அவள் பின்னழகை ரசித்தேன்.
அவளின் உடல் வடிவம் என்னை ஏதோ செய்தது.
அவளது முதுகு பளிங்கு போல் இருந்தது.
நான் அவளின் முதுகை முத்தம் இட்டு புடவையின் இடையில் கையை விட்டு இடுப்பை பிடித்தேன் என் வாயய் கழுத்தில் வைத்து முத்தம் கொடுத்தேன்.
அவள் டக்கென திரும்பி போ போய் குளி என்றாள்.
குளிக்க தண்ணி எங்க இருக்கு என கேட்டேன்.
அதான் Cane ல இருக்குல என்றாள்.
எந்த கேன் ல கீழ இருக்கே அதுவா என்றேன்.
ஆமா செம்ம Weight டா Cane கஷ்ட பட்டு தூக்கிட்டு போனேன் தெரியுமா என்றாள்.
அடிபாவி அதுலயா குளிச்ச உனக்கு அறிவே இல்லயா.
குடிக்கிற தண்ணில யாராவது குளிப்பாங்களா.
நமக்கு இருக்கிற தண்ணியே 7 கேன் தான்.
அதுல ரெண்டு நாளுக்கு சேர்த்து ஒரு கேன் தான் பார்த்து உபயோக படுத்திட்டு இருக்கேன்.
மூனு நாள் ஆகியும் இந்த பக்கம் ஒரு விமானமோ படகோ கப்பலோ எதுவும் போகல.
கண்ணுக்கு எட்டின வர கடல் தண்ணி தான்.
அவங்க நம்மல தேடி கண்டுபிடிக்க 10 நாள் ஆச்சுன அதுவரைக்கும் குடிக்க தண்ணிக்கு என்ன பண்ணுவ
சப்பாடுக்கு கூட இப்போ இளநீர் இருக்கு.
குடிக்க தண்ணிக்கு என்ன பண்ணுவ.
ஒரு கேன் தண்ணிய காலி பண்ணிருக்க என கோபமாக கத்திவிட்டு.
இரும்பு ராடை எடுத்து கொண்டு கீழே இறங்கி தீவுக்குள் போனேன்.
அவள் திரும்பி ஒரு வார்த்தை கூட பேச வில்லை அப்படியே அமைதியாக இருந்துவிட்டாள்.
நாங்கள் அமைத்த குடில் பக்கத்தில் கழிவறைக்கு குழி தோண்டினேன்.
5 அடி வரை தோண்டினேன் மண்ணில் இருந்து நீர் ஊற்று வந்தது.
அந்த நீர் சுத்தமாக இருந்தது.
அதை எடுத்து மணலாய் என் உடலை கழுவினேன்.
கொஞ்சம் நீரை எடுத்து வாயில் ஊற்றினேன்.
அது உப்பில்லாமல் குடிநீர் போல் இருந்தது.
நான் அதை அள்ளி அள்ளி பருகினேன்.
நான் மகிழ்ச்சியில் குழியை விட்டு வெளியே வந்து சாக்ஷி யை கூப்பிட்டேன்.
அவள் வரவில்லை பிறகு நானே குழியை விட்டு வெளியே வந்து படகில் ஏறி சாக்ஷி யை கூப்பிட்டேன்.
அவள் ஒரமாக சாய்ந்து கண்ணில் நீருடன் உட்கார்ந்து இருந்தாள்.
என்னை பார்த்ததும் கண்ணை துடைத்து கொண்டாள்.
நான் அதை கவனித்தேன்.
என்ன என கேட்டாள்.
நான் அவளை கட்டி அனைத்து.
சாரி டி என்னால கோபத்த கட்டு படுத்த முடியல என்றேன்.
நா எல்லாமே கோவத்துல பேசினது மன்னிச்சுடு டி என சொன்னேன்.
சரி Ok leave it என்றாள்.
நான் அவள் கண்ணீரை துடைத்து.
இங்க நீயும் நானும் மட்டும் தான் சண்டை போட்டாலும்.
Romance பண்ணாலும்.
ரெண்டு பேர் குள்ள தான் பண்ணணும்.
உனக்கு என்ன தோனுதோ சொல்லு என்றேன்.
நா Frank ஆ சொல்றேன்.
நா எதுவும் Think பண்ணல.
நா உன்ன Impress பண்ண Try பண்ண.
அந்த Time ல நமக்கு Drinking water foods பத்தி எல்லாம் Mind ல இல்ல உனக்கு Surprise ஆ ஏதாவது பண்ணி Impress பண்ணணும் அப்படி தான் என் Mind ல இருந்துச்சு.
ஏன்னா எனக்கு உன்ன பிடிச்சு இருக்கு.
I mean i love you என சொன்னாள்.
நானும் தான் டி என அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.
அவளும் முத்தம் கொடுத்தாள்.
இவ்வளவு நேரம் இத நினைச்சு தான் கவலை பட்டு இங்கயே உட்கார்ந்து இருந்தியா லூசு என்றேன்.
நா இத மட்டும் நினைக்கல வீட்டு ஞாபகம் வந்துச்சு.
நீ இருக்கும் போது அத மறந்திடுறேன்.
நீ என் கூட சண்டை போடாதடா Please என்றாள்.
சரி என உதட்டில் முத்தம் கொடுத்தேன்.
தண்ணிக்கு Sorry டா என்றாள்.
எனக்கு ஞாபகம் வந்தது.
கருத்து எழுதுங்கள்