கடலில் பதினோறாம் நாள்:
விடியற்காலை.
என்னை தேடி ஐஸ்வர்யா ஆண்டி.
காயத்திரி அக்கா மைதிலி ஆஷா ராதிக அபிநயா அக்கா.
இவர்கள் என்னை தேடி வந்து எழுப்ப.
நான் எழுந்தேன் எல்லோரும் குடில் பக்கம் போய் பல் துலக்கி விட்டு டீ குடித்து கொண்டு இருந்தோம்.
சாக்ஷி அர்ச்சனா வந்து கழிவறையை உபயோக படுத்தினர் பின் வெளியே வந்ததும் என்னை நோக்கி வந்தனர்.
நான் ராதிகா ஐஸ்வர்யா ஆண்டி பின்னால் போய் நின்றேன்.
அர்ச்சனா என்னை பார்த்து நேத்து நா பேசுனதுக்கு Sorry என சொன்னாள்.
எல்லோரிடமும் Sorry கேட்டாள் பின் எல்லோரும் பழைய படி பேசினோம்.
பின் காலை உணவை முடித்து விட்டு நான் கடலில் கரையில் சிப்பி இருப்பது போல் பார்த்தேன்.
நான் அதை நோக்கி போனேன்.
இங்கே அந்த மூன்று பசங்களும் வந்து ஏதோ பெரிய விவாதம் பண்ணி கொண்டு இருந்தார்கள்.
எல்லாம் பெரிய பெரிய சிப்பி அதை எல்லாம் சேகரித்து கொண்டே இருந்தேன்.
அங்கே ஏதோ பெரிய பிரச்சனை போல் தெரிந்தது.
நான் ஒரு சிப்பி ஓட்டை தூக்கி கொண்டு போனேன்.
நான் போய் என்ன ஆச்சு என கேட்க.
டேய் பெரிய புயல் வர போகுதாம் அதனால நாம எல்லோரும் இங்க இருந்து போலாம் னு முடிவு பண்ணி இருக்கோம் என்றாள்.
வேணாம் நாம இங்கயே இருக்கலாம் இங்கயே புயல சமாளிக்கலாம் என சொன்னேன்.
சோனி வந்து பேசினாள் இங்க பாருடா எனக்கு கடல பத்தி தெரியும் என எனக்கு அதை விளக்கினாள்.
எல்லோரும் கிளம்பி விட்டனர் நான் கடைசியாக.
போக வேணாம் என சொன்னேன்.
நாம வீட்டுக்கு போக வேணாமா என நிறைய விளக்கத்தை சொல்லி என்னை சம்மதிக்க வைத்தனர்.
எல்லோரும் புறப்பட தயார் ஆனோம்.
தேவையான எல்லாவற்றையும் எடுத்து கொண்டும்.
பின் முதலில் மணலில் புதைந்த மீன் பிடி படகை கஷ்ட பட்டு நகர்த்தி கடலில் தள்ளினோம்.
பின் மீதம் இருந்த இரு படகில் ஒரு படகை மற்றும் கரையில் இருந்து எடுத்தோம்.
எல்லோரும் கடைசியாக கழிவறையை பயன்படுத்தி விட்டு படகில் ஏறினோம்.
மீன் பிடி படகில் கயிற்றை கட்டி இந்த படகை இழுத்து போனார்கள் திசை தெரியாமல் கரு மேகத்திற்கு எதிர் திசை நோக்கி அவர்கள் படகை ஓட்டி போனார்கள்.
அந்த மீன் பிடி படகில் சாக்ஷி அர்ச்சனா சோனி மற்றும் மூன்று பசங்களும் 6 பேர் இருந்தனர்.
இந்த படகில் 11 பேர் இருந்தோம் இப்படியே ஒரு மூன்று மணி நேரமாக போய் கொண்டே இருந்தோம்.
மதியம் ஆனது பசி வேறு வயித்தை கிள்ளியது.
படகில் நேற்று சேர்த்து வைத்த தேங்காய் ஞாபகம் வந்தது கீழே போய் எடுத்து வந்து அதை உறித்து எல்லோரும் சாப்பிட்டோம் தேங்காயும் காலி ஆனது.
அவர்கள் படகை நிறுத்தினார்கள் என்னாச்சு என கேட்டாம்.
4 மணி நேரமா முழு வேகத்தில் ஓட்டி கொண்டு இருக்கிறோம் அதனால கொஞ்ம் நேரம் Engine க்கு Rest குடுக்கனும் அதான் என்றாள் சோனி.
இரு படகையும் சேர்த்து கட்டினோம் நாம எங்க போறோம் என கேட்டேன்.
தெரியல புயல்ல இருந்து தப்பிக்க அதுக்கு opposite direction ல Travel பண்ணிருக்கோம் May be 200km travel பண்ணிருப்போம் என சொன்னாள்.
சரி எல்லோருக்கும் சாப்பிட ஏதாவது இருக்கா என கேட்டேன் கொஞ்சமா Bred and jaam chocolate தான் இருக்கு குடிக்க தண்ணி தான் இல்ல என சோனி சொன்னாள்.
பாத்துக்கலாம் வேற ஏதாவது பிரச்சனை இருக்கா என கேட்டேன்.
நாங்கள் பேசுவதை சாக்ஷி மொழிபெயர்த்து அவர்களுக்கு சொன்னாள்.
இங்க இன்னோரு பிரச்சனை இருக்க லேடிஸ் பிரச்சனை என்றேன்.
எங்களுக்கு என்ன பிரச்சனை என சோனி கேட்டாள்.
பாத் ரூம் தான் பிரச்சனை என்றேன்.
ஆமா டா இத மறந்திட்டோம் எனறார்கள்.
நான் பசங்களிடம் கேட்டேன் உங்க படகுல Toilet இருக்கும்ல என கேட்டேன்.
அவர்கள் இருக்கு என சொன்னார்கள்.
அப்போ நீங்க எல்லோரும் அதில போங்க என சொன்னேன்.
நைட் ஆச்சுன கஷ்ட்டம் யாராவது தண்ணில விழுந்தா என சொன்னேன் எல்லோரும் புரிந்து கொண்டு அந்த படகிற்கு போனார்கள்.
நான் மட்டும் இதில் இருந்தேன் மீண்டும் படகை இயக்கினார்கள் நான் அப்படியே படகில் படுத்து தூங்கினேன்.
சில மணி நேரத்தில் படகு நின்றது நான் எழுந்து பார்த்தேன் என்னாச்சு என கேட்டேன்.
மூன்று பசங்களும் Engine பகுதிக்கு போய் ஏதோ செய்து கொண்டு இருந்தனர் ரெம்ப நேரமா முயற்சி பண்ணி வெறுத்து போய் உட்கார்தார்கள்.
எல்லோரும் Tension ஆனார்கள் நான் என்ன பிரச்சனை என கேட்டேன்.
Diesel காலி ஆச்சாம் என சொன்னார்கள்.
டீசல் என்கிட்ட இருக்கு என சொன்னேன்.
அது மட்டும் பிரச்சனை இல்ல Engine seized ஆச்சு இவங்களுக்கு இத Repair பண்ண தெரியாதாம் என சொன்னார்கள்.
எல்லோரும் குழம்பி போய் புலம்ப ஆரம்பித்து இருந்தனர்.
நான் அவர்களை பார்த்து இதுக்கு ஏன் கவல படுறிங்க.
கருத்து எழுதுங்கள்