மார்கழி மாத துவக்கம், காலை ஏழரை மணி, கிழக்கு வானில் பகலவன் இன்னும் எழவில்லை. முகில்கள் மறைக்காத வானில் இருந்து சிதறும் வெண் பனி பூமியின் மீது நேரடியாகவே பொழிந்து கொண்டிருந்தது.. !!
அந்த தனியார் ஆஸ்பத்திரியின் முன் இருந்த டீ கடைகளும் டிபன் ஸ்டால்களும் ஆவிகளை பறக்க விட்டபடி சுருசுருப்பாக இயங்கிக் கெண்டிருந்தன.
உணவுப் பையுடன் அறைக்குள் நுழைந்த சாருமதி பெட்டில் படுத்திருக்கும் தன் தாயைப் பார்த்து விட்டு பக்கத்து பெட்டில் உட்கார்ந்திருக்கும் அண்ணன் மனைவி கமலியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்த புன்னகை முகக் கவசத்துக்குள் மறைந்தாலும் கண்கள் அதைக் காட்டின.
“அம்மா தூங்கறாங்க” என்றாள் கமலி.
“ம்ம் தூங்கட்டும். நைட் தூங்கினங்களா?” மெதுவாகப் பேசினாள் சாரு.
“அப்பப்போ மழிச்சிட்டேதான் இருந்தாங்க. ஆனாலும் பரவால”
“நைட் நீங்க தூங்கினீங்களா?” அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“கொஞ்ச நேரம் தூங்கினேன். அப்றம் தூக்கமே வரல”
“இன்னிக்கு நைட் நான் இருந்துக்கறேன். நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க”
“சரி. நான் கிளம்பட்டுமா?” என்று எழுந்தாள்.
“காபி குடிச்சிட்டு போங்க. சூடா இருக்கு”
மீண்டும் பெட்டில் உட்கார்ந்தாள் கமலி. சாருமதி காபியை ஊற்றி அவள் கையில் கொடுத்தாள். ஆவி எழுந்த காபியை கையில் வாங்கி உதட்டருகே கொண்டு போய் உதடுகளைக் குவித்து மெதுவாக ஊதிக் குடித்தாள். ப்ரூ காபியின் மணமும் இளஞ் சூடும் இதமாய் இருந்தது. சுவைத்துக் குடித்தாள். சோர்ந்து போயிருக்கும் மனதில் புது தெம்பு வந்த மாதிரி இருந்தது.
காபி குடித்த பின் எழுந்து சொல்லிக் கொண்டு கிளம்பினாள் கமலி. உள்ளே இருக்கும்வரை அவ்வளவு குளிர் தெரியவில்லை. வெளியே நன்றாக குளிர் இருந்தது. ஸ்கூட்டியை வேகமாக ஓட்ட முடியவில்லை. ல்வெட்டர் அணிந்திருந்தும் வீசிய காற்றில் குளிரின் நடுக்கம் இருந்தது. அந்த நடுக்கத்தை வெல்ல பற்களை கிட்டித்து இறுக்கிக் கொண்டாள்.
அவள் கை விரல்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. வீட்டை அடைய அரை மணி நேரம் ஆனது. அதற்குள் முகக் கவசத்தையும் மீறி அவள் முகம் குளிரில் விரைத்திருந்தது. காம்போண்ட் கேட் திறந்திருந்தது. நேராக வண்டியை உள்ளே விட்டாள். உள்ளே சுவர் ஓரமாக நின்றிருந்த பைக்கின் பக்கத்தில் நிறுத்தி இறங்கி ஸ்டேண்ட் போட்டபோது நிருதி அவளைப் பார்த்தபடியே மாடியிலிருந்து படிகளில் இறங்கி கீழே வந்தான்.. !!
அவனைப் பார்த்ததும் குளிரின் நடுக்கத்துடன் லேசாக வெட்கிச் சிரித்தாள். அவனும் மெல்லச் சிரித்தான்.
“செம குளுரு” அவள் வார்த்தைகள் நடுங்கின.
“ஆமா. நல்ல பனி”.
“ஆஸ்பத்திரில இருக்குறவர தெரியல. வெளிய வந்தாதான் எவ்வளவு குளுர்னு தெரியுது. ஸ்வெட்டர் போட்டும் நடுங்குது” கைகளை இணைத்து தேய்த்து காற்றை ஊதினாள்.
“இப்பதான் வரியா?” பனியன் லுங்கியுடன் இருந்தான்.
“ஆமா. வண்டி ஓட்டவே முடியல. கை கால் எல்லாம் நடுங்குது” சொல்லியபடி முகக் கவசத்தைக் கழற்றினாள்.
அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தான். அவளும் சிரித்தாள். இருவரின் கண்களும் ஆழத் தொட்டு மீண்டன. இன்று காலை அவள் கண்ட கனவுக்காக திடுக்கிட்டு விழித்தது நினைவில் வந்தது. அதன் எதிரொலியாக இப்போது அவளுள் ஒரு தவிப்பெழுந்து அடங்கியது.
‘ச்சீ..’ உள்ளே சிணுங்கியது.
“எப்படி இருக்கு மாமியாக்கு?” குரல் தணிந்து கேட்டான்.
“ம்ம்.. பரவால” மெல்லத் தலையசைத்தாள்.
“கூட யாரு இருக்கா?”
“கொழுந்தியா வந்தா. அவளை விட்டுட்டு நான் வந்துட்டேன்” தயங்கி அண்ணாந்து மேலே பார்த்தாள். அவன் வீட்டுக் கதவு சாத்தியிருப்பது தெரிந்தது. மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள். “வீட்ல அவங்க இல்ல போல?”
“வேலைக்கு போயாச்சு”.
“ம்ம்” கண்கள் அலை பாய்ந்தன. அவன் கண்களைச் சந்தித்த அவள் நெஞ்சுக்குள் அந்த நடுக்கம் வந்தது. கனவு. அது ஏன்? சட்டென அடைத்துக் கொண்ட மாதிரி பேச்சு தடை பட்டது. வார்த்தைகள் எழவில்லை. இமைகளைச் சரித்து பார்வையைத் தழைத்தாள்.
“மறுபடி போகணுமா?” அவனே கேட்டான்.
“எங்க?” நிமிர்ந்து கண் பார்த்துக் கேட்டாள். அவள் உதடுகளில் மெல்லிய நடுக்கம். அது குளிரினால்தான் என்று நினைத்தாள்.
“ஆஸ்பத்திரிக்கு?”
“ம்ம்.. நைட் டிபன் குடுக்க போகணும். ஆனா அங்க தங்க மாட்டேன். பாத்துட்டு வந்துருவேன். ரெண்டு நாளா தூக்கமே இல்ல. ஒடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. நல்லா தூங்கி எந்திரிச்சாத்தான் கொஞ்சமாவது நிம்மதி வரும். தூங்காம ஒவ்வொண்ணையும் நெனச்சு நெனச்சு பைத்தியம் புடிக்குது” முண்டி எழுந்த வார்த்தைகள் கோர்வையின்றி நடுங்கி வந்து புலம்பலாகின.
“தூக்கம் இல்லேன்னா நல்ல காலத்துலயே மன அழுத்தம் கூடும். இப்ப சுத்தி சுத்தி பிரச்சனை வேற, சொல்ல வேண்டியதே இல்ல” என்று சிரித்தபடி சொன்னான்.
“ஆமா” அழுத்தமாக அவன் விழி பார்த்து “உண்மைய சொன்னா.. சாவு ஒண்ணு வராதானு இருக்கு. டக்குனு செத்துட்டா ஒரு பிரச்சனையும் இல்ல” என்றாள்.
“ஏய்..” அவன் திகைத்தான். “என்ன சொல்ற?”
“ப்ச்..” நாசூக்காக சிரித்தாள். குப்பென அவள் நெஞ்சில் ஒரு தாக்கம். சீற்றத்துடன் மூச்சு வெளியேறியது.
“போங்க” சட்டென அவள் முகம் கோணி நெஞ்சு விம்மியது. அவள் கண்கள் பனித்து துளிர்த்தன. நெஞ்சு கலங்கி மூச்சு சீறி ஒரு விம்மல் எழுந்து அடங்கியது.
“ச்ச.. என்ன கமலி இதுக்கு போயி..” அவனிடம் மெலிதான திகைப்பு.
கையில் இருந்த முகக் கவசத்தைச் சுருட்டி நீரில் தளும்பிய கண்களைத் துடைத்தாள். சர்ரென மூக்கை உறிஞ்சி மூக்கையும் அழுத்தி துடைத்தாள். அவள் மூக்கு நுனி சிவந்து விட்டது. முலைகள் எழ நீள் மூச்செறிந்து அவனைக் கேட்டாள்.
“நீங்க கிளம்பலையா?”
“கிளம்பணும். ரிலாக்ஸா இரு. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத”.
“எப்ப்ப்படித்தான்..” வார்த்தை தடுமாறி “என்னமோ போங்க” என்று விலகிப் போய் சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள்.
நிருதி எதுவும் பேசாமல் கேட்டை நோக்கி நடந்தான். பூட்டைத் திறந்தபடி அவன் முதுகைப் பார்த்துக் கேட்டாள்.
“எங்க போறீங்க?”
நின்று திரும்பி “கடைக்கு” என்றான்.
“எனக்கு ஒரு பால் வாங்கிட்டு வரீங்களா ப்ளீஸ்” முகம் குழைந்தாள்.
“ஓகே. ஒரு லிட்டரா?”
“அரை லிட்டர் போதும்”
“சரி..”
“இந்தாங்க காசு”.
“ஹா.. பரவால வெய். வாங்கிட்டு வரேன்”.
“இல்ல.. எனக்கு பிஸ்கட் ஒண்ணும் வேணும். எதுவும் சாப்பிடற மூடு இல்ல. டீ வெச்சு குடிச்சிட்டு படுத்துருவேன்”.
“என்ன பிஸ்கட் வேணும்?”
“மேரி கோல்டு. வாங்கிட்டு வாங்க காசு தரேன்” என்று சிரித்தாள்.
அவன் சிரித்தபடி வெளியே சென்றான். கமலி உள்ளே சென்று முகத்தை துடைத்து விட்டு ஸ்வெட்டரைக் கழற்றினாள். சுடிதார் கழுத்து விரிந்து பிரா பட்டி வெளியே தெரிந்தது. அதை உள்ளே தள்ளி மேலே இழுத்து விட்டாள். சரிந்திருந்த முலைகள் நிமிர்ந்து எழுந்து நின்றன. தாலியை எடுத்து அதன் மேல் விட்டாள். பின் முகத்தை தடவி மூக்கை வருடி கலைந்த தலை முடியை ஒதுக்கி சரி செய்தாள்.
அவள் மனசு நிலையழிந்திருந்தது. தன் கட்டுப் பாட்டை இழந்து அலை பாய்ந்தது. பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்து வெளியே வந்தாள். கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்த்தாள். குறைவில்லாத அழகு தான்.
வட்ட முகமும் குண்டு மூக்கும் தடித்த இதழ்களும் நன்கு திரண்ட முலைகளும் அமைந்த சராசரி குடும்பத்துப் பெண். காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவள்.
பள்ளியில் படிக்கும் போது ஒரு பையனை காதலித்தது தவிர வேறு எந்த தவறும் செய்திராத நல்ல பெண்.
பதினொரு வருட குடும்ப வாழ்க்கையில் ஒரு மகனுக்கு தாயாகியிருக்கிறாள். மகனைப் பெற்ற தளர்வை இப்போதுதான் உடலில் உணரத் தொடங்கியிருக்கிறாள். முகத்தின் அழகு குறைந்து வருவதாக, முலைகளின் நிமிர்வு சரிந்து வருவதாக உணர்கிறாள்.
அதனாலோ என்னவோ இவ்வளவு காலமாக மனதில் எழாத ஒரு எண்ணம் இப்போதுது எழுந்து அடிக்கடி அவளை வதைத்துக் கொண்டிருக்கிறது. அது ஏன் வந்தது எப்படி வந்தது என்றுதான் அவளுக்கும் புரியவில்லை. ஆனால் அந்த எண்ணம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது.
காலையில் ஆஸ்பத்திரியில் தூங்கி விழித்தபோது கூட அந்த எண்ணத்தால் வந்த கனவைக் கண்டுதான் திடுக்கிட்டு விழித்தாள். அதன் பின் அவள் தூங்கவில்லை. அதே நினைவாகவும் சிந்தனையாகவும்தான் இருந்தது. இப்போதும் அந்த கனவும் சிந்தனைகளும்தான் அவளுள் ஓடியது.. !!
கமலியின் முகம் இப்போது களையிழந்து சுண்டிப் போயிருந்தது. தூக்கமின்மையும் மனச் சோர்வுமே அதற்கு காரணம் என நினைத்தாள்.
உதடுகள்? ம்ம்.. ஓகே.! முலைகளைப் பார்த்தாள். அதுவும் ஓகேதான். ஆனால்……..
கருத்து எழுதுங்கள்