காதல்,காமம் பேதம் தெரியா காலத்தில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவம்.
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களுடன், சுவாரசியத்திற்காக சிறிது கற்பனை கலந்து தந்துள்ளேன். என் முதல் கதை. உங்கள் ஆதரவை தந்து உற்சாக படுத்த வேண்டுகிறேன்.
திருச்சிஅருகே ஒரு அழகிய கிராமம். பெயர் நல்லூர். அது 2007ம் ஆண்டு. அவன் மதன். வசீகர முகம். நல்ல நிறம். ஒல்லி தேகம். வயது 17. அந்த வயதுக்கே உரிய குறும்பு கண்கள். அரும்பு மீசை.
அவன் பிறந்தது அங்குதான். நடுதர விவசாய குடும்பம். உள்ளூரில் படிக்க வசதியில்லாத காரணத்தால் தனது சித்தி வீட்டில் தங்கி திருச்சியில் ஆங்கில பள்ளியில் படிக்க வைத்தார் அவன் தந்தை. நன்றாகத்தான் படித்துவந்தான். அவன் தந்தை இறக்கும் வரை.
அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். மாரடைப்பில் அவன் தந்தை காலமானார். அதன் பிறகு அந்த வருத்தத்தில் படிப்பு சுமாரானது. எப்படியோ 10ம் வகுப்பு படித்து முடித்தான். 12ம் வகுப்பு முடித்து கல்லூரி சென்று வேலைக்கு செல்ல பொறுமை இல்லை.
தற்போது அவனும் அவன் அம்மாவும் மட்டும்தான். எனவே சீக்கிரம் வேலைக்கு சென்று முன்னேற நினைத்து தொழில்நுட்ப படிப்பு படிக்க பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தான்.
9 மணிக்கு கல்லூரிக்கு போய் 5 மணிக்கு வந்துவிடுவான். வந்த பிறகு பக்கத்து வீட்டு மஹா அக்காவுடன் பேசிக்கொண்டே பொழுது ஓடிவிடும். ஞாயிற்று கிழமைகளில் நண்பர்களுடன் செலவு செய்வான்.
மஹா அக்கா கருப்பு நிறம் மிகவும் சுமாரான முகம். குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே விடுமுறையில் சித்தி வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்தால் மஹா அக்கா வீடுதான். அன்பாக இருப்பாள். எனவே அவன் எப்போது அங்குதான் இருப்பான்.
அப்பொழுதுதான் அவன் வாழ்வில் வந்தாள் இலக்கியா. இலக்கியா மஹா அக்காவின் மாமா மகள். அவன் பக்கத்து ஊர். பெயர் பூக்காடு. அவனைவிட 2 வயது பெரியவள். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தாள். கல்லூரிக்கு போக அவள் தந்தை அனுமதிக்காததால் வீட்டில் இருந்தாள். தற்போது அவள் அத்தை பெண்ணுடன் சில நாட்களை கழிக்க நல்லூருக்கு வந்திருக்கிறாள்.
மதன் கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து உடை மாற்றினான். அம்மா கொடுத்த டீயை ருசித்துவிட்டு மஹா அக்கா வீட்டிற்கு வந்தான். வாசலில் மஹாவின் தந்தை அமர்ந்திருந்தார். சொந்தம் இல்லாவிடினும் சிறுவயது முதலே அவரை பெரியப்பா என்று உரிமையுடன்தான் அழைப்பான். அவரிடம் என்ன பெரியப்பா டீ சாப்பிட்டாச்சா என்று கேட்டுக்கொண்டே அவர் பதிலை எதிர் பாராமல் வீட்டுக்குள் நுழைந்தான்.
உள்ளே நுழைத்தான் அங்கே மஹா அக்கா இல்லை. நேரே சென்று டிவியை ஆன் செய்துவிட்டு அங்கு இருந்த கட்டிலில் சாய்த்து கொண்டு சேனலை மாற்ற ஆரம்பித்தான். சன் மியூசிக்கில் சிம்ரன் தொட்டு தொட்டு ஆடும் சுல்தானா பாட்டுக்கு இடுப்பை ஆட்டிக்கொண்டு ஆடுவதை வாயை பிளந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.
என்ன ஒரு இடுப்பு. அழகிய வளைவு மடிப்பு இல்லாமல் இஸ்திரி போட்டு வைத்தது போல. அதன் நடுவே இருந்த கவர்ச்சியான தொப்புள். குனிந்து கொழுத்த முலைகளை ஆட்டும்போது அவன் ஆண்மை தலையை தூக்க ஆரம்பித்தது.
கொல்லைபுறத்திலிருந்து மஹா அக்காவின் குரல் மெல்ல அருகே கேட்பதை கேட்டு சேனலை மாற்றினான். ஜட்டி போடாததால் எழுச்சியை மறைக்க அருகில் இருந்த தலையணையை எடுத்து மடி மேலே வைத்துக்கொண்டான். மஹா அக்கா யாருடனோ பேசிக்கொண்டு உள்ளே வந்தாள். அவள் இலக்கியா.
அப்போதுதான் அவளை முதன் முதலாக பார்க்கிறான். நல்ல உயரம், பொன்னிறம். பேசும் கண்கள். அதிகம் தடிமன் இல்லாத அழகிய உதடுகள். தாடையில் இருந்த மச்சம் மேலும் அழகூட்டியிருந்தது. நீல நிற சுடித்தாரும் வெள்ளை நிற துப்பட்டாவும் அணிந்திருந்தாள். அவளை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்திருந்தது.
இருந்தாலும் முதன் முதலாக பார்க்கும் போது என்ன பேசுவது என டக்கென்று டிவிக்கு கண்களை திருப்பினான். WWE ஓடிக்கொண்டிருந்தது. மஹா அக்கா இலகியாவை எனக்கு அறிமுகம் செய்தாள்.
“டேய் தம்பி! இவதான் இலக்கியா. சங்கர் மாமா பொண்ணு”என்றாள். “ஓ. அப்படியா. ஹலோ இலக்கியா” என்று செயற்கையாய் புன்னகைத்தான். “இலக்கியா இவன்தான் மதன். பக்கத்து வீட்டு பையன் என்றாள்”அவளும் “ஹலோ” என் கூறிவிட்டு மஹா அக்கா காதில் ஏதோ கிசுகிசுத்தாள். உடனே மஹா அக்கா “டேய். சன் டிவி மாத்துடா. இலக்கியா. நாடகம் பார்க்கணுமாம்” என்றாள்.
அவனுக்கு சீரியல் பார்த்து ஒப்பாரி வைப்பது அறவே பிடிக்காது. எனவே சன் டிவிக்கு மாற்றிவிட்டு பேருக்கு இரண்டு நிமிடம் அமர்ந்திருந்துவிட்டு எழுந்தான். “எங்கடா போறே?” என்றாள் மஹா அக்கா. “ரெக்கார்ட் நோட்டு எழுதனும்கா. கிளம்பறேன்” என சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
கருத்து எழுதுங்கள்