மாலை மங்கும் நேரம். இருமலைகளின் அழகில் மயங்கிய சூரியன் அந்த மயக்கத்தில் இருந்து மீள முடியாமல் அந்த மலைகளின் அருகே நெருங்கி நெருங்கி வருகிறது. அந்த மலைகளின் அழகில் மயங்கிய சூரியன் அவற்றுடன் முழுவதுமாக சரணடைந்து விட்டது.
மலைகளின் அழகில் மயங்கிய சூரியன் அப்படியே உலகிற்கு ஒளி தரும் தனது உன்னத வேலையை மறந்து விட்டு மலைகளின் அழகில் மயங்கி மாட்டிக்கொண்டது. உலகை இருள் சூழ ஆரம்பித்தது. உலகை இருள் சூழ்ந்தாளும் இயற்க்கை நமக்காக இரவிலும் வெளிச்சம் தர படைத்த நிலா வந்துவிட்டது.
இப்படி இயற்கையின் படைப்பை இரசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். இதை சந்தேகமா அல்லது கோபமா என்று என்னால் விளக்க முடியவில்லை. சூரியன், சந்திரன் என்ற அற்புதத்தை படைத்த நமது இறைவன் ஏன் இவைகள் இரண்டையும் தனிமையில் வாட விடுகின்றான்.
அவற்றை மட்டுமல்ல என்னையும் ஏன் தனிமையில் வாட விடுகிறான். தனிமை அழகானது தான். ஆனால், அதிகமான தனிமை ஆபத்தானது. இயற்கை என்ற இறைவனின் அற்புத படைப்பான மனிதனாகிய என்னையும் ஏன் சூரியனை போலவும், சந்திரனை போலவும் தனிமையில் வாட விடுகிறான்.
தனிமை ஒரு இனிமை தான் ஆனாலும் அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாருங்கள் நான் என்னை பற்றி விவரிக்கின்றேன். என் பெயர் அபிமன்யு அனைவரும் அபி என்று அழைப்பார்கள். நான் காஞ்சிபுரத்தில் எனது பள்ளிப்படிப்பை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் படித்து முடிக்க போகின்றேன்.
என் தாய் நான் பிறக்கும் போதே இறந்து விட்டாள். எனது தந்தையோ வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு என்னை என் பாட்டியிடம் விட்டுச் சென்று விட்டார். அவர் எப்போது என்னை விட்டுச் சென்றார் என்பது எனக்கு தெரியாது. நான் சிறுவயதில் இருந்தே மிகவும் தனிமையில் தான் வளர்ந்தேன்.
எனது பாட்டியும் 10-ம் வகுப்பு படிக்கும் போதே இறந்து விட்டார். எனது பாட்டி எனக்கு அடிக்கடி சொல்லும் ஒரே விசயம் “படிப்பு ஒன்னு தான் உன்னோட வாழ்க்கைய மாத்தும் அபி, நா கொஞ்ச நாள் தான் இருப்பேன் ஆனால், நீ படிக்குற படிப்பு நீ சாகுறவர உன் கூடவே இருக்கும்”. நான் எப்படிப்பட்டவன் என்பதை ஓரளவு ஊகித்து இருப்பீர்கள்.
நான் நன்றாக படிக்கும் மாணவன். நான் 10வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் எனது பள்ளியே என்னை இலவசமாக என்னை 12-ம் வகுப்பு வரை படிக்க வைத்தது. நான் விடுதியில் தான் வளர்ந்தேன். என்னை பார்க்க யாரும் வர மாட்டார்கள்.
ஒருவரை தவிர எனது தாயின் தங்கை. எனது சித்தி “ஹேமா”. எப்போதாவது எனது “ஹேமா” சித்தி வந்து என்னை பார்த்துவிட்டு எனக்கு பண உதவிகள் செய்வார். என் பாட்டி உயிருடன் இருக்கும் வரை எனக்கு உதவிகள் செய்தார் என் சித்தியும் செய்தார்.
என் சித்தியின் கணவரின் பெயர் “மதன்” அவர்களுக்கு ஒரு பையன் அவன் பெயர் “சர்வேஷ்”. எப்படியோ எனது பள்ளி படிப்பு முடிந்தது. எனக்கு கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்று ஆசை. எனக்கு பிடித்த பாடம் இயற்பியல். பி. எஸ். சி ஃபிசிக்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசை.
எனக்கு சொல்லும் அளவிற்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. நான் படித்துக்கொண்டே இருப்பதால் மிகவும் தனிமையாக தான் பள்ளியிலும், விடுதியிலும் இருப்பேன். பலர் நான் படித்துக்கொண்டே இருப்பதால் என்னை ஏளனம் செய்வார்கள்.
என்னை துன்புறுத்தவும் செய்வார்கள். சிலர் நான் அவர்களை விட நன்றாக படிப்பதால் என்னிடம் பேச மாட்டார்கள். எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை ஆறுதல் என்றும் யாருமில்லை. தனிமையில் எனது வலிகளையும், வேதனைகளையும் சுமந்து கொண்டு இருக்கின்றேன்.
ஆனால், எனது ஆசிரியர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் எனது ஃபிசிக்ஸ் ஆசிரியர் ரவிச்சந்திரன் அவர்கள். ஒரு நாள் பள்ளி இறுதிநாள் (farewell)அது அப்போது நான் வழக்கம் போல் தனிமையாக அமர்ந்திருந்தேன் அப்போது.
(ரவிச்சந்திரன் சுருக்கமாக ரவி என்று அழைக்கப்படுவார்)
ரவி: Hey Abi, ! Why you’re always being alone da. ?
நான்: Nothing sir! I think I’m cursed by being alone.
ரவி: அதுவும் கரெக்ட் தான் அபி.
நான்: சார்! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
ரவி:I’m physicist da. How could I trust in God and I’m a atheist.
நான்: அப்போ இந்த கடவுள், இந்த மதங்கள் எல்லாமே பொய்யா சார்?
ரவி: ஆனா, நீ சின்ன பையன் மாதிரியே ஏதும் பேச மாட்ற டா. உன் வயசுக்கும், நீ பேசுற பேச்சுக்கும் சம்மந்தமே இல்லடா. எல்லா மதங்களையும் ஒரு உண்மை இருக்கு.
நான்: super sir but, தனிமையே தலைசிறந்த ஆசான் சார்.
ரவி: அடேங்கப்பா. !
நான்: உன்மையிலேயே உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா சார்?
ரவி: இல்லடா.
நான்: நீங்க அப்போ எத நம்பிருங்க, I mean life ல எது மேலயாச்சும் நம்பிக்கை வேணும்-ல சார்?
ரவி: I beleive in this universe da.
நான்: புரியல சார்?
ரவி: இந்த universe நம்புனா எப்பவுமே அது உன்ன ஏமாத்தாது நாம எல்லாருமே இந்த பிரபஞ்சத்தோட பார்ட் தான்டா.
நான்: அப்போ உங்களுக்கு எது வேணும்னாலும் universe கிட்ட தான் கேட்பிங்கலா சார்.
ரவி: ஆமாம் டா அபி. நம்ம எண்ணங்கள் தான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குது. Thoughts became things da.
நான்: அப்போ இந்த universe அ நம்பாலாம்-னு சொல்லுரிங்க.
ரவி: ஆமா டா, இந்த universe எல்லாருக்குமே நல்லது தான் பண்ணும். விவேகானந்தர் சொல்வார்-ல “நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்”. அது 100% உண்மை டா.
நான்: எனக்கும் இந்த universe நல்லது பண்ணுமா சார்?. எனக்கு B. sc physics பண்ணணும்-னு ஆச. ஆனால், என்ன யாரு படிக்க வைப்பாங்க பாட்டியும் இறந்துட்டாங்க, சித்தியும் உதவுவாங்கலா-னு தெரியல கண்டிப்பா இந்த universe அ நம்புனா எனக்கு நினைச்சது நடக்குமா சார்.
ரவி: நீ நினைக்குறது தான்டா உனக்கு நடக்கும். Trust our universe blindly da. It’d never let you down.
நான்: சரிங்க சார் நா நம்புறேன்.
ரவி: இப்போ நான் உன்கிட்ட வந்து universe பத்தி பேசுறதுக்கு காரணமே universe தான் டா. “Nothing is Coincidence here. Everything is planning of our universe”. என் கூட வா டா.
நான் அவருடன் staff room-ர்க்கு சென்றேன். அவர் தன்னுடைய லாக்கரில் இருந்து “Secret” புத்தகத்தை என்னிடம் கொடுத்து என்னுடைய பரிசு என்று கொடுத்தார். அந்த புத்தகத்தை படித்த பிறகு தான் என் வாழ்வில் ஒரு பெரிய மாற்றமே ஏற்பட்டது.
நான் வாழ்க்கையை பார்க்கும் கண்ணோட்டம் முற்றுலிமாக மாறியது. நாம் நினைப்பது தான் நமக்கு நடக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டேன்.
அவர் அந்த புத்தகத்தை கொடுத்த பின்பு இதை கூறினார். ” நீ வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு, அடிப்பட்டு வளர்ந்துருக்கடா, கவலைபடதா இனிமேல் உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். நம்ம universe உனக்காக ஒரு பெரிய plan வச்சுருக்கு Beleive it and accept it”. என்று கூறி முடித்தார்.
பரிட்சையும் முடிந்தது. எனக்கு எங்கு போவது என்ன செய்வது என்று தெரியவில்லை. மறுநாள் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் அவர் அவரவர் ஊருக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். ஆனால், எனக்கு என்ன செய்வது என்ற யோசனையே இல்லை. பாட்டியும் இல்லை.
நான் எங்கு செல்வது. ஆனால், நான் நமது பிரபஞ்சத்தை நம்புகிறேன். கண்டிப்பாக பிரபஞ்சம் எனக்கு நாளைக்கு ஒரு வழி காட்டும் என்ற ஆழமான நம்பிக்கையில் இருக்கின்றேன். இனிமேல் இந்த பிரபஞ்சம் விட்ட வழியில் பயணிக்க போகிறேன்.
இப்படியே தனிமையில் வாடும் நிலவினை பார்த்துக்கொண்டு தனிமையில் வாடும் என்னை பற்றி விவரித்துக்கொண்டிருக்கின்றேன். இரவு தூங்கினேன். அப்போது ஒரு பெண்ணின் கண்கள் தோன்றியது. அது என்னுடைய ஆன்மாவை உடலை விட்டு உறிஞ்சி எடுத்தது.
இருதயத்தை இருக்கியது அவளது இருள் சூழ்ந்த கருவிழிகள். இதுதான், காதல் உணர்வோ என்னவோ. அவள் என் முன்னே செல்கிறாள். நான் அவளின் பின்பு செல்கிறேன். ஒரு பாறையின் உச்சியில் அவள் முன்பு நிற்கிறாள் அவள் பின்பு நான் நிற்கிறேன்.
எங்களை சுற்றி வெறும் கடல். மேலே நிலவொளி. அங்கு வீசும் காற்று ஆன்மாவை உடலை விட்டு வெளியே தள்ளுகிறது. நான் தயங்கி, தயங்கி அவள் அருகே செல்கிறேன். இரவின் கருமையும் தோற்றுப்போகும் அவளின் கூந்தலின் கருமைக்கு முன்னால்.
அவளின் கூந்தல் காற்றின் உதவியால் என் முகத்தில் உரசியது இல்லை இல்லை முகத்தை வருடியது. நான் தயங்கி தயங்கி அவளின் தோள்களின் மீது கை வைத்தேன். அவள் மெதுவாக திரும்புகிறாள்.
யாரோ என்னை தூக்கத்தில் இருந்து எழுப்புகிறார்கள்.
யாரோ: அபி, அபி. Wake up da.
இது எனக்கு பழக்க பட்ட பெண்ணின் குரல் தான். கண்களை திறந்து பார்த்தேன். அது எனது சித்தி “ஹேமா”.
ஹேமா: என்ன சார், நல்ல தூக்கமா?
நான்: செம்ம கனவு சித்தி, எந்திரிக்க மனசே வரல அதான்.
ஹேமா: அப்படியென்னடா கனவு?
நான்: நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.
ஹேமா: அப்படியே உன்னோட Things எல்லாத்தையும் pack பண்ணி கிளம்புடா அபி. அப்படியே என் கூட வந்துரு.
நான்: What a surprise? மதன் சித்தப்பா ஏதும் நினைக்க மாட்டாரா? அவரு கிட்ட பேசிட்டிங்கலா.
ஹேமா: என்கூட வராம எங்க போக போரடா நீ. உன்ன பாத்துக்க யாரு இருக்கா நான் தான இருக்கேன். உங்க அம்மா பண்ண உதவிக்கு நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதுக்கு ஈடுகொடுக்க முடியாது. சீக்கிரம் கிளம்பிட்டு வாடா பெரிய மனுசா.
நானும் கிளம்பினேன். கிளம்பும் வரை இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டே அவ்வளவு சந்தோசத்தில் கிளம்பினேன். எனது சித்தியும் காரை எடுத்துக் கொண்டு வந்தார். நானும் எனது பொருட்களை எடுத்து காரில் வைத்து விட்டு நானும் உட்கார்ந்தேன். காரில் புறப்பட தொடங்கினோம். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு.
ஹேமா: Lemme play some song. It’s a 2 hours journey.
(அலைபாயுதே படத்தில் இருந்து “சிநேகிதனே” என்ற பாடல் ஒலிக்க தொடங்கியது.)
இந்த பாடல் என் மனதை என்னவோ செய்தது. என் மனதில் அலைபாய செய்தது. எனக்கு நான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. என் இதழ்களில் புன்னகை வந்தது.
ஹேமா: டேய் என்னடா, உனக்குள்ளயே சிரிக்கிற. what are you hiding form me my dear son?
நான்: அதுவா சித்தி, I had a dream last night. There’s a girl such a wonderful girl. Her eyes oh my god words couldn’t describe how much beautiful her eyes is. அந்த பொண்ணு என்னமோ பண்ணுறா சித்தி.
ஹேமா: டேய் என்னடா, கனவுல வந்த பொண்ணுக்கு இப்படி கவிதை-லா சொல்லுற அபி. அவ எப்படி இருந்தா என்ன விட அழகா என்ன?
நான்: அவ முகத்த பாக்குறதுக்குள்ள நீங்க எழுப்பி விட்டிங்க. One minute late அ எழுப்பி இருந்த நல்லா இருந்துருக்கும்.
ஹேமா: சரி சரி விடு, அதான் காலேஜ் சேர போரல. அங்க உன் கனவுல வந்த பொண்ண விட நல்ல நல்ல அழகான பொண்ணுங்களா இருப்பாங்க டா. அப்போவே உன் பாட்டிக்கிட்ட சொன்னேன் Co-education சேத்து விடுங்க-னு உங்க பாட்டி என் பேச்சையே கேட்கல. If you studied in co-ed you would definitely have a girl friend this time.
நான்: You don’t worry. Our universe have a plan for everyone.
ஹேமா: universe ah? டேய் பெரிய மனுசா. சும்மா சொல்லக்கூடாது டா இந்த வயசுலையே நிறைய விசயம் தெரிஞ்சு வச்சுருக்க. யாரு உனக்கு இத பத்தி சொன்னது?.
நான்: என் physics teacher ரவி சார் தான்.
ஹேமா: சும்மா சொல்லக்கூடாது அவரு செம்ம smart தான்.
நான்: நீங்க அவருகிட்ட பேசும் போது, அவர சைட் அடிக்கிறத பாத்துருக்கேன் சித்தி.
ஹேமா: நீ சாதாரண ஆளு இல்லடா ஆனா. இருந்தாலும் அவரு intellectual, unique and classy too da.
நான்: சரி அத விடுங்க எனக்கு bore அடிக்குது. கொஞ்ச History தெரிஞ்சுபோம்.
ஹேமா: எத பத்தின History da?
நான்: நீங்க, அம்மா, அப்பா, பாட்டி about everything happened in past. சொல்லுங்க கேட்போம் 2 hours journey.
ஹேமா: உன் அப்பா இராமச்சந்திரன். ராம்-னு கூப்பிடுவாங்க. ஆளும் பாக்க செம்ம ஹேண்ட்ஸம் ஆ இருப்பாரு. உங்க அம்மா ருத்ரா தேவி. ருத்ரா-னு கூப்புடுவோம்.
என பழைய கால நினைவுகளை எல்லாம் எனது சித்தி ஹேமா என்னிடம் கூற ஆரம்பித்தார். வாருங்கள் அவருடன் நாமும் சேர்ந்து பயணித்து என்ன நடந்தது என்று பார்ப்போம். (ஹேமாவின் கண்ணோட்டத்தில் கதை நகர்கிறது)
என் பெயர் ஹேமலதா, எனக்கு ஒரு அக்கா அவளின் பெயர் ருத்ரா தேவி. இது 1999 ம் ஆண்டு. எனது தந்தை ரிட்டையர்ட் ஆர்மி கேப்டன் Ex. Cap. இந்திரன். தாய் கெளசல்யா அரசுப்பள்ளி ஆசிரியை. எனது தந்தை எங்களை மிகவும் கட்டுபாடுடன் வளர்த்தார்.
எனது அக்காவிற்கு கல்லூரி படிப்பு முடிந்தது. அவள் B. A. English literature படித்து முடித்தாள். நான் இரண்டாமாண்டு B. sc. chemistry படித்துக்கொண்டிருந்தேன். என் அக்காவை திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று எனது பெற்றோர்கள் விரும்பினார்கள்.
நாங்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றோம். எனது தாயுடன் பணிபுரியும் சக ஆசிரியை அமராவதி. எனது தாய் கெளசல்யாவும், அமராவதியும் அவ்வளவு நெருக்கம். உயிருக்கு உயிராக பழகி வந்தார்கள். அமராவதியின் கணவர் மாணிக்கம். அவர் தாசில்தார் ஆக பணியாற்றினார்.
மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு மிகவும் அடிமையாக இருந்ததார். ஒரு நாள் அதிக மது போதையில் இருசக்கரவாகனம் ஓட்டி சென்று விபத்தில் திருமணமான 3 வருடங்களிலேயே இறந்து விட்டார். அரசுப் பணியாளர் பணியில் இருக்கும் போதே இறந்ததால் அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு பணி கிடைக்கும்.
அப்படித்தான் மாணிக்கம் இறந்ததால் அமராவதி க்கு வேலை கிடைத்தது. அமராவதி க்கு திருமணமான இரண்டாம் வருடத்தில் ஒரு பையன் பிறந்தான் அவன் தான் இராமச்சந்திரன் (இராம்). அமராவதி அவர்கள் B. A. தமிழ் முடித்து இருந்ததால் கணவன் இறந்தவுடன் அரசுப்பள்ளியில் தமிழ்ஆசிரியையாக பணியமர்ந்தார்.
கல்யாணமான 3 வருடத்திலேயே கணவனை பலிகொடுத்து விட்டு ஒரே ஒரு பையனோடு வாழ்ந்து வந்தார். அவனை நன்றாக படிக்கவும் வைத்தார். இராமும் படித்து ஸ்டேட் பாங்க் வங்கியில் கிளை மேனேஜராக பணியாற்றுகின்றார்.
அமராவதியும் தன் பையனுக்கு பெண் தேட தொடங்கினார். எங்கள் வீட்டிலும் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். என்னதான் படித்திருந்தாலும் சாதி என்ற சாக்கடைக்குள் மூழ்கி இருந்தார்கள். எனது குடும்பமும், அமராவதி அவர்களின் குடும்பமும் ஒரே சமூகம் என்பதால் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடு செய்தார்கள்.
திருமணமும் நடந்து முடிந்தது. எனது அக்கா ருத்ரா தேவி அவள் ஒரு பூவை போன்றவள். மிகவும் மென்மையானவள். இளகிய மனம் கொண்டவள். சிறிதேனும் அவள் மனம் புன்பட்டாள் அவளால் அதை தாங்கி கொள்ள முடியாது.
தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்று இருப்பாள். நான் அப்படியல்ல என் மனதிற்கு பிடித்ததை செய்வேன். நான் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள்.
ஆனால், என்னுடன் படிக்கும் மதன் என்பவரை காதலித்தேன். எனது அக்கா திருமணம் முடித்த 2 மாதத்திலேயே என்னையும் கல்யாணம் செய்ய வற்புறுத்தினார்கள். ஆனால், நான் வீட்டிற்கு தெரியாமல் மதனுடன் ஓடி வந்துவிட்டேன். மதன் வேறு சமூகத்தை சேர்ந்தவர்.
எப்படியானாலும் எங்கள் சமூகம் இல்லை என்றால் என் வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், எனக்கு சாதி, மதம் என்றாலே பிடிக்காது. மனிதனை மனிதனாக பார்ப்பது தான் என் குணம். எனது அக்கா பயந்த சுபாவம் கொண்டவள்.
அதனால் தான் அவள் ஆண்களிடமே பேசாமல் இருந்தாள். ஏன் எந்த ஆணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள். நான் அவளுக்கு எதிர். அவள் வீட்டிற்கு கட்டுப்பட்டவள் நான் எதற்கும் கட்டுபடாதவள். அதனால் தான் என் மனதிற்கு பிடித்த மதனை காதலித்தேன்.
என் அக்கா கல்யாணம் முடித்த 2 மாதத்திலேயே என்னையும் கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், என்னுடைய படிப்பு என்று கூறினேன். திருமணம் செய்து கொண்ட பிறகு படி என்றார்கள். எனது அக்கா கல்யாணத்தில் ஏதோ ஒரு சொந்தக்கார பையனை பார்த்திருக்கிறார்கள்.
அவனுக்கும் என்னை பிடித்து போக என் பெற்றோரிடம் திருமணத்திற்கு ஒப்புதல் சொல்லியிருக்கின்றார். ஆனால், அவன் கனடாவில் பணிபுரிகிறான், 1 மாதம் மட்டுமே அவனுக்கு விடுமுறை இருந்ததால் என்னை அவனுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து என்னை சித்திரவதை செய்தார்கள்.
நான் மதனுடன் ஓடி வந்துவிட்டேன். அவனுடன் திருமணமும் செய்து கொண்டேன். ஆனால், மதனின் பெற்றோர் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் விருப்பமின்றி நீ திருமணம் செய்து விட்டாய் என்று எங்கள் இருவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
இனிமேல் நீங்கள் இறந்தால் கூட உங்கள் இருவர் முகத்திலும் முழிக்க மாட்டேன் என்று மதன் அவர் பெற்றோரிடம் கூறிவிட்டு என்னை அழைத்துச்சென்று விட்டார். மதனுக்கு ஒரு தம்பி “ராஜா” என்று. அவனும் தன் பெற்றோரிடம் கெஞ்சிப்பார்த்தான் ஆனால், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
ஆனால், நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் என் ஆசையை மட்டும் நினைத்து எடுத்த இந்த முடிவிற்காக இன்றும் நினைத்து நினைத்து வருத்தப்படுகிறேன். அப்படி என்ன வருத்தப்படும் அளவிற்கு என்ன நடந்தது என்று நினைப்பது எனக்கு கேட்கிறது.
நான் என் சுயநலத்தை மட்டும் நினைத்து எடுத்த முடிவு என் பெற்றோர்கள் இருவரின் உயிரையும் காவு வாங்கியது. அவர்களுக்கு தங்கள் உயிரை விட கெளரவம் தான் பெரியதாக தெரிந்திருக்கிறது. இருவரும் விஷம் குடித்து இறந்து விட்டார்கள்.
ஏன், உன் பெற்றேராரிடம் உன் காதல் விசயத்தை பற்றி கூறியிருக்கலாமே என்று நினைப்பது கேட்கிறது. ஒரு நாள் நான் மதனுடன் பைக்கில் வந்து வீட்டில் இறங்கியதற்கு என் மனதையும், உடலையும் அவ்வளவு புன்படுத்தினார்கள். அவர்களிடம் நான் காதல் செய்வதை சொன்னால் என்னை கொன்று இருப்பார்கள்.
என்னதான் படித்து இருந்தாலும் சாதி என்ற சாக்கடைக்குள் மூழ்கி இருப்பவர்களிடம் எதைப்பற்றி பேசினாலும் புரியாது. என் பெற்றோரின் இறப்பிற்கு வந்தேன். அனைவரும் என்னை துரத்தினார்கள். ஆனால், எனது அக்கா ருத்ரா மட்டும் கண்களில் கண்ணீரோடு என் முன் வந்து இப்போ உனக்கு சந்தோசமா என்று கேட்டாள்.
என்னால் அவள் முகத்தை கூட பார்க்க முடியவில்லை நான் அப்படியே வெளியே சென்று விட்டேன். வாசலிலேயே உட்கார்ந்து இருந்தேன். இரவு வந்தது. என் அக்கா வந்தாள். வா சாப்பிடு என்றாள். அவளை கட்டியணைத்து அழுதேன்.
இப்படியெல்லாம் எனக்கு நடக்கும் என்று தெரியாது என்று அவளிடம் அழுது புலம்பினேன். அவளும் சரி விடு நீ உன்னோட காதல் விசயத்தை சொல்லியிருந்த உன்ன கொன்று இருப்பார்கள். இவர்கள் இறந்ததற்கு காரணம் நீ அல்ல. அவர்களின் சாதி தான் என்றாள்.
அவள் எனக்கு அக்காவாக தெரியவில்லை என் அன்னையாக தெரிந்தாள். எனது பெற்றோரின் இறுதி சடங்கு என அனைத்து காரியங்களும் முடிந்தது. என் அக்கா தனது தங்க நகைகள் சிலவற்றையும், சிறிதளவு பணமும் என்னிடம் கொடுத்தாள்.
3 மாதம் கழித்து வா சொத்துகள் அனைத்தையும் பங்கு பிரிக்க வேண்டும் என்றாள். நானும் மதனுடன் சென்று விட்டு 3 மாதங்கள் கழித்து வந்தேன். ஆனால் 3 மாதங்கள் கர்ப்பமாக வந்தேன். 3 மாதங்கள் எனக்கும் மதனுக்கும் இடையில் வந்த சண்டைகள் எங்களை மிகவும் நெருக்கமாக்கியது.
எனது அக்காவிடம் நான் கர்ப்பம் ஆக இருப்பதை கூறினேன். அவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. என்னை கட்டியணைத்து கண்ணங்களில் முத்தமிட்டாள். அவளிடம் கேட்டேன் உனது தாம்பத்திய வாழ்க்கை எப்படி போகிறது என்று. அப்போது தான் அவளுள் பூட்டி வைத்திருந்த மாபெரும் சோகத்தை வெளிகாட்டினாள்.
எனது அக்காவின் கணவர் ராமிற்கு தன்னுடன் வேலை பார்க்கும் தன் கணவனை இழந்த “ரேகா” என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதை ராமின் தாய் அமராவதி எப்படியோ கண்டறிந்துவிட்டார். அதனால் தான் தன் மகனுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
என்னதான் திருமணம் ஆன பின்பும் அவர் இன்னும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றார். என்னுடன் அவர் ஆசையாக கூட இதுவரை பேசியதில்லை என்று என்னை கட்டியணைத்து அழுதாள். நானும் உன்னை போன்றே என் மனதிற்கு பிடித்தவரை காதலித்து அவரை மணமுடித்திருக்க வேண்டும்.
என் மொத்த வாழ்க்கையுமே இப்படி நாசமாக போய் விட்டது. ஆனால், நீ சந்தோசமாக இருக்கின்றாய் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதுவும் கர்ப்பமாக இருக்கிறது ஹேமா என்று என்னை கட்டியணைத்தாள்.
பிறகு, சொத்தில் எனக்கு சேர வேண்டியவற்றை சரியாக பிரித்து கொடுத்து என்னை வழியனுப்பி வைத்தாள். என்னுடன் எப்போதும் தொலைபேசி-யில் பேசுவாள். எனக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு நடத்தினாள். அவள் எனக்கு அக்கா அல்ல அம்மா.
ஒரு நாள் நான் அப்போது 9 மாதம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். உனக்கு ஒரு சந்தோசமான விசயம் என்றாள் என்ன என்று கேட்டேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றாள். எனக்கு அளவு கடந்த சந்தோசம். இப்போ நீயும், ராமும் நல்லா க்ளோஸ் ஆகிட்டிங்களா என்று கேட்டேன்.
அதற்கு அவள் எனது அத்தை அமராவதி-தான் எனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பெத்து தராம உனக்கு சொத்துல ஒரு பைசா கொடுக்க மாட்டேன் என்று மிரட்டியதால் இப்படி ஆனது என்றாள். எப்படியோ உனக்கு ஒரு குழந்தை வர போகிறது அதை நினைக்கும் போதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு 10 வது மாதம் குழந்தையும் பிறந்தது.
சர்வேஷ் பிறந்தான். ஆனால் அவன் பிறக்கும் போது எனது கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டது அதனால் எனது கர்ப்பப்பையை அவன் பிறக்கும் போதே வெட்டியெடுத்து விட்டார்கள். என்னால் அடுத்த குழந்தைகள் பிரசவிக்க முடியாது. எனது அக்கா என்னை பார்க்க வந்தாள்.
ராம் எங்க என்று அவளிடம் வினாவினேன் அவள், அவர் அமராவதி அத்தை சொத்துகள் சிலவற்றை அவர் பெயருக்கு மாற்றிவைக்கவும், என்னையும், அமராவதி அத்தையையும் தனியே தவிக்க விட்டு சென்று விட்டார் என்று கூறினாள்.
எனக்கு அடுத்து குழந்தை பிறக்காது என்ற வேதனையை விட அவளின் வாழ்வு இப்படி ஆகிவிட்டது என்ற வேதனை மென்மேலும் வலியை தந்தது. எனக்கு குழந்தை பிறக்கும் போது எனது அக்காவிற்கு 2 மாதம். 8 மாதங்கள் கழித்து அவளுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அவன் பெயர் அபிமன்யு. ஆனால், இதில் பெரிய துக்கம் என்னவென்றால் வாழ்க்கையில் வலியிலும், வேதனையிலும் வாடிய எனது அக்கா பிரசவவலி தாங்க முடியாமல் இறந்து போனாள். பாவாம் பூவைப்போன்றவளுக்கு இவ்வளவு வலிகளை இந்த இறைவன் கொடுத்தால் இவள் எப்படி தாங்கிக் கொள்வாள்.
எனக்கு தெரிந்து இறைவன் சாத்தான்கள் வாழும் இந்த நரகத்தில் தேவதையை தவறுதலாக படைத்துவிட்டோம் என்று புரிந்து கொண்டு அவளை மீண்டும் அழைத்துக் கொண்டான் போல். எனது அக்காவிற்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்காத நான் அழுது, அழுது அடுத்து அழுவதற்கு கண்களில் கண்ணீர் இல்லாமல் போனது.
இறைவன் தான் அவளை அழைத்துக் கொண்டார் என்று என் மனதை நான் தேற்றிக்கொண்டேன். அபிமன்யு வை நான் பார்த்துக்கொள்ளலாம் என்று நான் நினைத்தேன் ஆனால், அமராவதி அத்தை நான் செய்த பாவங்களுக்கு காசிக்கு சென்றாலும் பாவமன்னிப்பு கிடைக்காது நான் இவனை வளர்க்கிறேன் என்றார்.
அவரும் அபிமன்யு வை 8ம் வகுப்பு படிக்கும் வரை பார்த்து கொண்டார். பிறகு அவர் உடல் நிலை சரியில்லாமல் போக அபிமன்யு வை அவன் படித்த அதே பள்ளியல் விடுதியில் சேர்த்தார். பிறகு இரு வருடங்கள் கழித்து அமராவதியும் இயற்கை எய்தினார். இப்போ அந்த அபிமன்யுக்கு அனைத்தையும் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
(அபிமன்யு வின் பார்வையில் கதை நகர்கின்றது)
என தனது கண்களில் கண்ணீரோடு அனைத்தையும் சொல்லி முடித்தார் என் சித்தி “ஹேமா”.
நான்: நம்ம எல்லாருமே போன ஜென்மத்தில பெரியபாவம் பண்ணிருக்கோம் போல அதான்.
ஹேமா: நானும் அடிக்கடி அதான்டா நினைப்பேன்.
நான்: இப்ப புரியுது நான் ஏன் எப்பவுமே தனியாவே இருக்கேன். அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்று.
ஹேமா: How da?
நான்: என் ருத்ரா அம்மா ரொம்ப தனியாவே இருந்திருக்காங்க, அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சும் போச்சு அதான் எனக்கு தனிமை ரொம்ப பிடிச்சுருக்கு. அதே மாதிரி உங்களையும் ரொம்ப பிடிச்சிருக்கு.
ஹேமா: I love you abi.
நான்: love you too Hema chithi.
ஹேமா: அங்க தலப்பாகட்டி பிரியாணி கடை தெரியுது வா பிரியாணி சாப்பிட்டு போவோம்.
நான்: You know what?
ஹேமா: what?
நான்: I love biriyani more than you.
ஹேமா: அப்படியா, உனக்கு அப்போ பிரியாணி கிடையாது போடா. சென்னைக்கு போயே சாப்பிட்டுக்கலாம் உன் சித்தப்பா cook பண்ணி வச்சுருப்பாரு சாப்பிட்டு சாவு இன்னைக்கு.
நான்: ஐய்யோ வேண்டாம், குட்டி அபி பாவம் please, please என் செல்லம்ல பிரியாணி வாங்கி தாங்க சித்தி எனக்கு பிரியாணி ய விட உங்களதா ரொம்ப பிடிக்கும் போதுமா.
ஹேமா:நா விளையாடினேன் டா, அவரு cook பண்ணுறத மனுசன் சாப்பிடுவானா. வா வாங்கி தரேன்.
காரை தலைப்பாகட்டி பிரியாணி கடையின் முன்பு நிப்பாட்டினோம். இருவரும் கடையினுள் சென்றோம்.
ஹேமா: சரி டா, நா restroom போய்ட்டு வரேன் நீயும் restroom போகனும் னா போய்ட்டு வாடா.
நான்: ஆமா சித்தி, எனக்கும் செம்ம urgent. போய்ட்டு வரேன்.
இருவரும் ரெஸ்ட்ரூம் போய்விட்டு வந்து ஒரு டேபிளில் உட்கார்ந்தோம். உட்காந்த உடனே ஹேமா சித்திக்கு ஃபோன் வந்தது மதன் சித்தப்பா தான் அவருடன் பேசிவிட்டு இருவரும் பிரியாணி சாப்பிட்டு விட்டு சர்வேஷ் க்கு பார்சல் வாங்கி கொண்டு காரில் புறப்பட்டோம்.
சென்னையை வந்தடைந்தோம். சித்தியிடம் கேட்டேன் நீ உங்க கூட தங்குறதுக்கு சித்தப்பா ஏதும் சொல்ல மாட்டாரா என்று கேட்டேன். அதற்கு, உன் சித்தப்பா தான்டா என்ன முதல அவன கூப்பிட்டு வா-னு சொன்னார் என்று சித்தி கூறினார். அவர்கள் வசிப்பது அடையார் பகுதியில். எனது சித்தப்பா “மதன்” ஒரு Stock market trader. நாங்கள் வீட்டினை வந்தடைந்தோம்.
மதன் வந்தார் என்னை கட்டியணைத்து.
மதன்: Welcome home my dear son.
நான்: Thank you சித்தப்பா.
ஹேமா: மதன் வா இவன் things ல எடுத்து வைக்க கெல்ப் பண்ணு ப்ளீஸ். ஆமா, சர்வேஷ் எங்க?
மதன்: வீடியோ கேம் விளையாடிட்டு எழுந்திருக்க மாட்டிங்குறான்.
ஹேமா: இவனுக்கு வேற வேலையே இல்ல கேம், கேம்-னு காலேஜ் படிக்குற பையன் மாதிரியா இருக்கான். இன்னும் சின்ன பையன் மாதிரி.
மதன்: அவன விடு செல்லம். ரொம்ப டயர்டா இருப்ப நா பாத்துக்குறேன். அபி எனக்கு கெல்ப் பண்ணுறயா இல்ல tierd ah இருக்கா.
நான்: நா Help பண்ணுறேன் சித்தப்பா. I’m not tierd yet.
மூவரும் எனது பொருட்களை எடுத்துக்கொண்டு அந்த Elevator-ல் ஏறி 7 வது மாடியில் இருந்த அவர்களின் ரூமிற்கு சென்றோம். உள்ளே சென்றோம்.
ஹேமா: டேய் fatty, இங்க வாடா யாரு வந்துருக்கா பார்.
ஒரு ரூமில் இருந்து ஒரு சத்தம் வந்தது. அது சர்வேஷின் ரூம் என்று புரிந்து கொண்டேன்.
சர்வேஷ்: Sorry mummy, I’m at boss battle and don’t call me fatty.
மதன்: டேய், உனக்கு பிரியாணி வேணமா?
சர்வேஷ்: என்னது பிரியாணியா இதோ வந்துட்டேன்.
மதன்: Meet your brother abi.
சர்வேஷ்: Hi abi, good to see you mate.
நான்: Hi, nice to see you too mate.
ஹேமா: இனிமேல், அபி also gonna staying with us.
சர்வேஷ்: what? ஆனா, என் ரூம என்னால ஷேர் பண்ண முடியாது. Because, என் பெட் எனக்கே பத்த மாட்டிங்குது.
மதன்: இன்னோரு ரூம் சும்மா இருந்துச்சுல அத அபிக்கு ரெடி பண்ணிட்டோம். வா அபி உன் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.
மதன் என்னை எனது அறைக்கு அழைத்து சென்றார். நான் அவரிடம் கேட்டேன். நான் இங்கு தங்குவதில் உங்களுக்கு எந்த சிரமமும் இல்லையே. கல்லூரி சேரவும் நான் விடுதியில் தங்கி கொள்கிறேன் என்றேன். அதற்கு மதன், டேய் உனக்காக தான்டா இந்த flat அ வாங்குனதே 3 பெட்ரூம் இருக்க மாதிரி.
நன்றி சித்தப்பா என்று கூறினேன். உங்க அம்மா செய்த உதவிக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லடா. சரி ஃப்ரெஷ் ஆகிட்டு வா என்றார்.
நானும் எனது துணிகளை அலமாரியில் வைத்து விட்டு குளித்து விட்டு வந்தேன். இரவு சாப்பாடு நேரமும் வந்தது. சாப்பிட அழைத்தார்கள் நானும் சாப்பிட சென்றேன். எனக்காக டைனிங் டேபிளில் கடையில் இருந்து நிறைய சாப்பாடு வாங்கி வைத்திருந்தார்கள்.
ஹேமா: don’t be shy da, it’s your home.
மதன்: வாடா சாப்பிடுவோம்.
சர்வேஷ்: வா Bro, shy ah feel pannatha.
நானும் போய் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன்.
சர்வேஷ்: நல்ல வேல மம்மி அபி க்கு தனி ரூம் கொடுத்துதிங்க. நான் கூட என் ரூம ஷேர் பண்ண சொல்லிடுவிங்களோ-னு பயந்துட்டேன்.
ஹேமா: ஏன்டா, ஷேர் பண்ண சொல்லியிருந்த ஷேர் பண்ணியிருக்க மாட்டியா டா?
சர்வேஷ்: Nothing like that mom, பாவம் அபி தா நசுங்கி போயிருப்பான்.
அனைவரும் சிரித்தோம்.
மதன்: சாப்பிடு டா அபி, இல்லனா இந்த சர்வேஷ் & ஹேமா ரெண்டு பேரும் எல்லா சாப்பாட்டையும் சாப்பிட்டுருவாங்க.
ஹேமா: ஆமா, இவரு வாய பாத்துட்டு உட்கார்ந்திருக்கவறு பேசுறாறு பாரு. மதன் வர வர வாய் நீ ரொம்ப பேசுற.
மதன்: சரிங்க my dear dictator, எனிமேல் நா ஏதும் பேசமாட்டேன்.
(காதல் திருமணம் என்றால் இப்படித்தான் இருக்கும்போல என்று உணர்ந்து கொண்டேன். என் கனவில் வந்த பெண்ணின் நியாபகம் வந்தது. )
ஹேமா: நீ சாப்பிட போரியா இல்ல.
நான்: wait, wait I’d eat wait.
(எனக்கு இந்த உணவை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு என் நன்றியுனர்வை வெளிப்படுத்தினேன்)
நான்: Gratitude சொல்லிட்டு தான் சாப்பிடுவேன் அதான்.
மதன்: How did you know about this things da.
ஹேமா: இவன் physics sir ரவி teach பண்ணிருக்காரு.
மதன்: You have a bright future Abi.
ஹேமா: சரி வாங்க சாப்பிடுவோம்.
நான்: சித்த கிட்ட உங்க பழைய கதையை பத்தி கேட்டேன் சித்தப்பா. உங்க அப்பா, அம்மா, தம்பி பத்தி ஏதும் சொல்லல அவங்களுக்கு என்ன ஆச்சு.
சர்வேஷ்: Get ready for boring session.
மதன்: சர்வேஷ் பிறந்த உடனே எங்கள என் parents வந்து பார்த்தாங்க அவனுக்கு 3 வயசு இருக்கும் என் அப்பா நெஞ்சுவலி வந்து இறந்துட்டாரு. அவரு சிகரெட் அதிகமா ஸ்மோக் பண்ணுவாரு. அம்மாவும் சர்வேஷ்க்கு 10 வயசு இருக்கு போது இறந்துடாங்க.
தம்பி ராஜா இப்போ அமெரிக்கா-ல இருக்கான். Jessica-னு அவன் கூட வேலை பார்த்த Foreign பொண்ணையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுக்கு Twins இரண்டு பொண்ணுங்க Aurora & Arabella -னு. அவன் Christianity க்கு convert ஆகிட்டான். I think he also changed him name Aaron னு நினைக்கிறேன். Name நல்லா இருக்குல.
நான்: ஆமா சித்தப்பா, நானுமே Buddhism convert ஆகலாமா-னு பாக்குறேன்.
ஹேமா: டேய் உன் size க்கும் வயசுக்கும் நீ பேசுற பேச்சே சம்பந்தம் இல்லடா. Anyway Buddhism is not a religion it’s a way of living a life.
சர்வேஷ்: Come on, சாப்பிடுறதுல கவனம் செலுத்துங்க. சாப்பிடும் போது பேசக்கூடாது.
ஹேமா: சரிங்க சார்.
இரவு உணவை சாப்பிட்டு முடித்தோம். நீண்ட நாளுக்கு பிறகு மிகவும் சந்தோஷமாக இருந்தேன். ஏதோ தனிமையில் இருந்து வெளியே வந்தது போன்ற உணர்வு. இரவு தூங்க சென்றேன். மீண்டும் எனது தாயான தனிமையிடமே வந்து விட்டேன். அறையை சாத்த என்னை இருளில் அரவணைத்தாள். என் தனிமைத்தாய். பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு தனிமை தாயின் மடியில் தலை வைத்து படுத்து தூங்க ஆரம்பித்தேன். கனவு வந்தது.
என் கையை இழுத்து கொண்டு ஒரு பெண் செல்கிறாள். நானும் அவளிடம் பேச முயற்சிசெய்கிறேன். எனது தயக்கத்தின் காரணமாக அவளிடம் பேச முடியவில்லை. நீண்ட தூரம் என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடிகின்றாள். “அதே கண்கள்” மட்டும் தெரிந்தது அவள் முகத்தை காற்றின் உதவி கொண்டு அவளின் கூந்தல் மூடிக்கொண்டது. என் இதயத்தின் துடிப்பு என் காதுகளுக்கே கேட்டது. என்னை இழுத்துக்கொண்டு ஓடியவள் அப்படியே நின்றாள். இருவரும் மூச்சு வாங்கினோம். அவள் என்னை திரும்பி பார்.
(Alarm அடித்தது )
அவள் முகத்தை பார்பதற்குள் அலாரம் அடித்து என்னை எழுப்பி விட்டது. கனவில் வர பெண்ணின் முக்ததை கூட பார்க்க முடியவில்லை என்ற ஏக்கமும், ஏமாற்றமும் என்னை வாட்டியது. இருந்தாலும் இந்த பிரபஞ்சம் நமக்கு நல்லதே செய்யும். நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்து கொண்டேன். காலை கடன்களை செய்து முடித்து விட்டு அமைதியாக எனது அறையில் உட்கார்ந்தேன்.
கதவை எனது சித்தி அபி, அபி என்று தட்டினார்கள்.
நான்: இதோ வரேன் சித்தி. என்ன சித்தி.
ஹேமா: வாடா டீ, காஃபி எதாச்சும் குடிப்ப.
நான்: இல்ல சித்தி நா டீ, காஃபி குடிக்க மாட்டேன். News paper இருக்கா சித்தி?
ஹேமா: வா உங்க சித்தப்பா படிச்சுக்கிட்டு இருக்காரு.
மதன் சித்தப்பா “The Hindu” News paper படித்து கொண்டு இருந்தார். அவர் படித்து முடிக்கும் வரை வெயிட் செய்தேன். பிறகு அவர் படித்து முடித்த பின்பு நான் வாங்கி படித்து முடித்தேன். எனது சித்தி குளித்து விட்டு வா சாப்பிடலாம் என்றார். நானும் குளித்து விட்டு வந்தேன்.
சித்தி என்னை சாமி கும்பிட அழைத்தார்கள் சாமி ரூமிற்கு சென்றேன். அங்கே எனது அம்மா ருத்ரா தேவியின் படத்தை வைத்து இருந்தார்கள். நானும் எனது சித்தியுடன் சேர்ந்து சாமி கும்பிட்டு முடித்து சாப்பிட ஆரம்பித்தோம். சாப்பிட்டு முடித்த பின்பு சர்வேஷ் வீடியோ கேம் விளையாட சென்று விட்டான். நான், எனது சித்தி மற்றும் சித்தப்பா மூவரும் உட்கார்ந்து இருந்தோம்.
ஹேமா: மதன் அபிக்கு Next week birth day.
மதன்: செம்மாயா celebrate பண்ணிடுவோம்.
நான்: உங்களுக்கு எப்படி என் birthday next week னு தெரியும்.
ஹேமா: இன்னிக்கு 28. 4. 2018 Saturday. 5. 5. 2018 next Saturday உனக்கு birthday தான.
நான்: அதெப்பிடி இவ்வளவு accurate ஆ சொல்லுரிங்க.
ஹேமா: எனக்கு 1999 செப்டம்பர் 7 சர்வேஷ் பிறந்தான். அப்போ உங்க அம்மா இரண்டு மாசம். அப்புறம் ஒரு 8 மாதம் கழிச்சு நீ பிறந்த மே 5.
நான்: சித்தி நீங்க பழசு எல்லாத்தையும் நல்லா நியாபகம் வச்சுருக்கிங்க.
ஹேமா: Thank you.
நான்: சித்தப்பா நீங்க b. sc chemistry படிச்சிங்க பட் stock market trading பண்ணுறிங்க எப்படி.
மதன்: காலேஜ் டிகிரிக்கும் காசு சம்பாதிக்குறதுக்கும் சம்பந்தமே இல்லடா.
நான்: நீங்க எதுல Trade பண்ணுறிங்க. Bombay stock exchange (BSE) or National stock exchange (NSE)? இது ரெண்டுல எது மெயின்
மதன்: இரண்டுமே மெயின் இல்ல FOREX & NASADAQ இதான் மெயின். நான் Mostly international stock trading தா பண்ணுவேன். உனக்கு புரியுற மாதிரி சொன்னா Dollars-ல தா Trading பண்ணுவேன். NSE & BSE -ல relience, jio, airtel, TATA, pharmaceutical, agriculture something Futuristic கம்பெனி Stocks வாங்குவேன் டா. உனக்கு எப்படி NSE & BSE பத்தி தெரியும்.
நான்: அதான் டெய்லி நியூஸ் பேப்பர்-ல படிக்குறேன்-ல. சரி, நீங்க International trading க்கு எந்த stock broker use பண்ணுறிங்க.
கருத்து எழுதுங்கள்